Wednesday Jul 03, 2024

நெடியம் செங்கல்வராயசுவாமி திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி :

அருள்மிகு செங்கல்வராய சுவாமி திருக்கோயில்,

நெடியம், திருத்தணி வட்டம்,

திருவள்ளூர் மாவட்டம் – 631207.

இறைவன்:

செங்கல்வராய சுவாமி

அறிமுகம்:

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி வட்டத்தில், திருத்தணியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நெடியம் எனும் பகுதியில் அமைந்துள்ளது இம்மலைக்கோயில். சுமார் 600 படிகளோடு அமைந்துள்ள மலைக்கோயில், படிகள் ஒரே சீராக இல்லாது இருப்பினும் பாதை ஓரளவு செம்மையாகவும், ஏறுவதற்கு எளிதாகவும் அமைந்துள்ளது. ஏகாந்தத் திருச்சூழலில் ஆலயம் அமைந்துள்ளது. முருகக் கடவுள் ‘செங்கல்வராய சுவாமி’ எனும் திருநாமம் தாங்கியருளி, வள்ளி தெய்வானை தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இந்திரன் த்தியைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளான், திருக்கோயில் திருப்பணி செய்விக்கப்படவேண்டிய நிலையிலுள்ளது.  

புராண முக்கியத்துவம் :

முருகப்பெருமான் திருத்தணிக்கு செல்வதற்கு முன்பு சில காலம் இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. இதனால், பக்தர்கள் முதலில் செங்கல்வராய சுவாமியை வணங்கிவிட்டு திருத்தணிக்கு செல்லலாம். முருகப்பெருமானை இந்திரன் வழிபட்டதாக நம்பப்படுகிறது. இந்திரன் கண்ட சுனை நீலோத்பல தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே இந்த தலத்தின் தீர்த்தமாகத் திகழ்கிறது. மேலும், இரண்டு சுனைகளும் இங்குள்ளன.தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். கிருத்திகையில் சற்று கூடுதல் நேரம் திறந்திருக்கும். 

நம்பிக்கைகள்:

கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட வேண்டிய சிறந்த தலமாக இந்த நெடியமலை திகழ்கின்றது.

சிறப்பு அம்சங்கள்:

மலையின் உச்சியில் அமைந்துள்ள வடக்கு நோக்கிய சிறிய கோயில் இது. 600 படிகள் பறந்த பிறகு கோயிலை அடையலாம். மூலவர் செங்கல்வராய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். ஒற்றை முகத்துடன் நான்கு கைகளுடன் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார். யானை போன்று காட்சியளிக்கும் இந்த மலை கஜகிரி என்று அழைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் அழகான சிறிய குளம் உள்ளது. மலைப்பாதையில் மரங்களோ, நிழல்களோ இல்லாததால் மாலையில் கோயிலுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

திருவிழாக்கள்:

கிருத்திகையில் சிறப்பு அபிஷேக – அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. ஆடிக் கிருத்திகையில் காவடி எடுத்துக்கொண்டு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆங்கில வருடப் பிறப்பன்று கந்தன் சந்தனக் காப்பில் கண்கொள்ளாத காட்சி அளிப்பார்.

 

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெடியம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருத்தணி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top