Sunday Jul 07, 2024

சதுர்வேதி மங்கலம் ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம்.

முகவரி :

அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில்,

சதுர்வேதி மங்கலம்,

சிவகங்கை மாவட்டம் – 630501.

போன்: +91- 4577- 246170, 94431 91300 +91-4577-242 981, 98420-82048

இறைவன்:

ருத்ரகோடீஸ்வரர்

இறைவி:

ஆத்ம நாயகி

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சதுர்வேதிமங்கலத்தில் அமைந்துள்ள ருத்ரகோடீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ருத்ர கோடீஸ்வரர் என்றும் அன்னை ஆத்ம நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்தல விருக்ஷம் என்பது எலுமிச்சை மரம். தீர்த்தம் என்பது சூரியனும் சந்திர தீர்த்தமும் ஆகும். வரலாற்று ரீதியாக இந்த இடம் மட்டியூர் என்று அழைக்கப்பட்டது. ஆவணி மற்றும் மாசி மாதங்களில், சூரிய கடவுள் சிவபெருமானின் மீது ஒரு வாரம் தனது கதிர்களை வைத்து வழிபடுகிறார்.

புராண முக்கியத்துவம் :

       ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்னையில் பிரம்மா, கோபக்கார முனிவரான துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாபவிமோசனம் பெற பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரசர் எனும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில், சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். கலைமகளை இவ்விடத்தில் சிவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு வந்த கோடி ருத்திரர்கள் வந்தனர். இவர்கள் சிவனின் அம்சங்கள். பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த ருத்ரர்களுக்கு அழிவு என்பதே கிடையாது. பிரம்மாவுக்கு படைப்புத் தாழிலில் இவர்கள் உதவி செய்வார்கள். கோடி ருத்ரர்களும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்தனர். கோடி ருத்ரர்களும் வணங்கிய இந்த லிங்கத்திற்கு, “ருத்ர கோடீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

 லவகுசன் அஸ்வமேத யாகம் செய்த இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம், தலமரம், தலப் பறவை என ஐவகை சிறப்புகளைப் பெற்றுள்ளது. கோடி ருத்ரர்கள் வணங்கிய இங்கு வேண்டிக்கொள்ள நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். பிரகாரத்தில் சுவாமிக்கு முன்இடப்புறம் சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் அருளுகிறார். இவரை ஞாயிற்றுக் கிழமையில் ராகுகால நேரத்தில் வணங்கினால் குலம் சிறக்கும், கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நந்தி மிகவும் பெரியவடிவில் இருப்பதும், நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் இருப்பதும் சிறப்பு.

சூரிய பூஜை: வருடந்தோறும், ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் சுவாமி மீது ஒருவாரம் வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப் பரப்பி பூஜை செய்கிறார். நான்கு வேதங்களை ஓதும் வேதவிற்பன்னர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால், இவ்வூர் “சதுர்வேதமங்கலம்’ என்றழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்:

இக்கோயிலில் 10 நாட்கள் மாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மார்கழி மாதம் – டிசம்பர் – ஜனவரி மாதங்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்யலாம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சதுர்வேதி மங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்குடி, சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top