Tuesday Jul 02, 2024

கோட்டைமேடு ஸ்ரீ சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோயம்பத்தூர்

முகவரி :

கோட்டைமேடு ஸ்ரீ சங்கமேஸ்வரர் திருக்கோயில்,

ஈஸ்வரன் கோவில், உக்கடம், கோட்டைமேடு,

கோயம்பத்தூர் மாவட்டம்,

தமிழ்நாடு 641001

இறைவன்:

சங்கமேஸ்வரர்

இறைவி:

அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோட்டைமேடு கிராமத்தில் அமைந்துள்ள கோட்டைமேடு ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீ சங்கமேஸ்வரர் என்றும் அன்னை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். கோயம்புத்தூர் நகரின் மையப் பகுதியில் திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் கோட்டையாக இருந்த இந்தக் கோயில், கோட்டை இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாமல் தற்போது கோட்டைமேடு என்ற பெயரைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் என்ற பெயருக்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கதை என்னவெனில்… பேரூர் நாட்டை ஆண்ட இருள மன்னன் கோவன் நினைவாக கோவன்புதூர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த இடம் ஒரு காலத்தில் சங்கு மலர் செடிகள் / கொடிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த செடிகள் அழிக்கப்பட்டு கோவில் கட்டப்பட்டதால், கோவில் சங்கீச்சுராமுடையார் கோவில் என்றும், சங்கமேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்பட்டது.

புராண முக்கியத்துவம் :

 இக்கோயில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. மூன்றாம் மைசூர் போரின் போது இக்கோவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு நான்காவது மைசூர் போருக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. பழைய கோயில் கல்வெட்டுகளின் ஒரு பகுதி, அதாவது அதிஷ்டானம் ஜகதி மற்றும் குமுதம் ஆகியவை 63 வார்களுக்கு பீடமாக பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பெரும்பாலான பழைய கல்வெட்டுகள் இப்போது கிடைக்கவில்லை.

சிவபக்தனான கரிகால் சோழ மன்னன் தனக்கு பின் நாட்டை ஆள புத்திரன் இன்றி தவித்தான். தனக்கு ஏற்பட்ட புத்திரபீடை நீங்க வேண்டி சிவனிடம் மனம் உருகி வழிபாடு செய்து முறையிட்டான். அவ்வாறு அவன் வழிபட்டு வர, ஓர்நாள் இரவில் தன் கனவில் சிவன் அற்புதங்கள் புரிந்த சில தலங்களில் ஆலயங்கள் எழுப்புவது போல கனவு கண்டான். இது குறித்தும், புத்திரபீடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்தும் அவன் தனது குருவிடமும், ஆன்றோர்களிடமும் ஆலோசனை கேட்டான். அவர்களது ஆலோசனையின் படி, அவர் அற்புதங்கள் புரிந்த இடங்களில் எல்லாம் கோயில்களை எழுப்பி வணங்கினான். அவன் கட்டிய 36 சிவத்தலங்களில் இத்தலம் 31வது தலமாக விளங்குகிறது.

நம்பிக்கைகள்:

மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்பபிரச்சனைகள் தீரும், தொழில்விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும். சிவராத்திரி அன்று 108 முறை வலம் வருதல், கண் விழித்து விரதம் இருத்தல். சிவ நாமங்களை உச்சரித்தல், திருவைந்தெழுத்து ஓதியும் செய்தல்.

சிறப்பு அம்சங்கள்:

சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்த அசுரன் ஒருவன், யாராலும் தனக்கு அழிவு நேராதபடி சாகா வரம் பெற்றான். தேவலோகத்தினை ஆள ஆசை கொண்டு ரிஷிகள், தேவர்களுக்கு துன்பம் தந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது அட்டூழியத்தினால் மனம் வெதும்பிய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவனை வேண்டுவதைத் தவிர அசுரனை அழிக்க வேறு வழியில்லை என்றார். அதன்படி, தேவர்களும், ரிஷிகளும் ஆதியில் சங்குபுஷ்பங்கள் நிறைந்த தோட்டமாக இருந்த இவ்விடத்திற்கு வந்து சிவனை பூஜித்து வணங்கி அசுரனை அழிக்கும் படி முறையிட்டனர். அதன்பின் அசுரனை சிவன் வதம் செய்தார்.

இங்கு அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நம் படைப்பில் கோளாறு இருந்தாலும், விதியையே மாற்றும் வல்லமையுள்ளது என்பர். மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு.

சுற்றுப்பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரியன், காப்புவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். 63 நாயன்மார்களின் திருவுருவ சிலை இங்கு உள்ளது. சண்முக சுப்பிரமணிர் சன்னதி இங்கு அமைந்துள்ளது.

சோமஸ்கந்தராக உள்ள முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காட்சிதருகிறார். வடக்குநோக்கிய மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற பெயருடன் உள்ளார். இவரது ஆறுமுகங்களும் நேரே நோக்கியநிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களைத் தாங்கியபடி காட்சி தருவது சிறப்பாக உள்ளது. கோயில் அமைப்புப்படி இவரே மூலவராக அருள்பாலிக்கும் தோற்றத்தில் உள்ளார். சுவாமிக்கு இடப்புறத்தில் அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் அருட்காட்சிதருகிறார்.

திருவிழாக்கள்:

சித்திரையில் 13 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆருத்ரா தரிசனம், விஜய தசமி.

காலம்

10 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோட்டைமேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top