Sunday Jun 30, 2024

காஞ்சிபுரம் ஸ்ரீ மதங்கீஸ்வரர் கோயில்

முகவரி

காஞ்சிபுரம் ஸ்ரீ மதங்கீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு 631501

இறைவன்

இறைவன்: மதங்கீஸ்வரர் இறைவி: காமாட்சி

அறிமுகம்

காஞ்சிபுரம் மதங்கீஸ்வரர் கோயில் (மதங்கேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், நந்திவர்ம பல்லவன் காலத்தியது. மிகவும் பழமையான இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. மதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது. மதங்கேசம் எனும் இது, ஐம்புலக் குறும்புகளை அடக்கவேண்டி மதங்க முனிவர் அருச்சித்த மதங்கேசர் கோயில் மதங்கேசர் தெரு மிசின் மருத்துவமனைக் கெதிரில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது. பல்லவர்காலச் சிற்பங்கள் அமைந்து அரசியலால் காக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

மகாசரஸ்வதி தேவிக்கே இத்தல ஈஸ்வரி வித்யாப்யாசம் செய்ததால் இத்தல இறைவியை வழிபடுவோர் கல்வி, உயர்பதவி, தொழில் மேன்மை பெறுவர் என்பது ஐதீகம். திருமணத் தடைகள் நீங்கி இனிய இல்லறம் நல்லறமாக அம்பிகை அருளால் அமையும். இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. இத்திருத்தலத்தில் ஸ்ரீ ஆனந்த மகாகாளி வடக்கு திசை நோக்கி ஆனந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள இத்தாயை வழிபட்டால் ஆனந்த வாழ்வை பெறலாம். இத்தலத்தில் இரு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவை கிழக்கு நோக்கி உள்ள நந்தியின் பெயர் சுவேத நந்தி. மேற்கு நோக்கி உள்ள நந்தி பெயர் மதங்க நந்தி எனவும் வழங்கப் பெறுகிறது. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய என்று இவ்விரு நந்தியம் பெருமான்களை பிரதோஷ தினங்களில் மனமுருக தரிசித்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ராஜயோகம் கிடைக்க திருவருள் பெற்றவர் மட்டுமே இத்திருத்தலத்தை தரிசிக்க முடியும் என்று கூறுவர். பராசவனம் என்பது திருநாங்கூரின் புராண கால பெயராகும். பராசவனத்தில் மதங்காசிரமத்தில் கடுந்தவம் புரிந்த மதங்க மாமுனிவரின் வேண்டுதல்படி திருமால் பன்னிரு மூர்த்திகளாகி பராசவனத்தில் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி சர்வேஸ்வரனை வழிபட்டதாக பராசவனப் புராணம் கூறுகிறது. சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் தம் திருமுறையில் இத்தலத்தைப் பற்றி பெரிதும் போற்றி உள்ளார். சுந்தரர் காலம் 9ஆம் நூற்றாண்டு எனும்போது இத்தலமும் அதற்கும் முந்தியது எனலாம். சங்க இலக்கியங்களில் திருநாங்கூர் பற்றி உள்ளது பெருஞ்சிறப்பு. பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் “நாங்கூர் வேளிர்” என்ற குருநில மன்னன் மகளை கரிகாற்சோழன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் உள்ளது. எனவே கரிகாற் சோழனின் மனைவி நாங்கூரைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகின்றது. சைவ சமயப் பெரியோர்களில் ஒருவரான சேந்தனார் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடியவர். இவர் திருநாங்கூரைச் சேர்ந்தவர். நாங்கூர் சேந்தன் என்று போற்றுகின்றனர். மதங்க மகரிஷிக்கு இத்தல அம்பிகையே மகளாகத் தோன்றி திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரை மணம் புரிந்தார் என்று பராசவன புராணம் கூறுகின்றது. கோயில் அமைந்த விதமும் மகா அற்புதம். இத்தல கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்பிராகாரம், திருச்சுற்று மதில் கொண்டு கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் கிழக்கு புறத்தில் இடது பக்கத்தில் மாதங்கீஸ்வரி சந்நதியும், சண்டிகேசஸ்வரர் சந்நதியும் உள்ளது. திருச்சுற்றின் வடக்குப் புறத்தில் தெற்கு திசை நோக்கி காளி சந்நதியும், அடுத்து மதங்கமுனி சந்நதியும் உள்ளது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சந்நதிகளும், வடமேற்கு மூலையில் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி சந்நதிகளும் திகழ்ந்து அருட்பாலிக்கின்றனர். இத்தல சிற்பங்கள் முற்கால சோழர்காலத்தை சார்ந்தவையாகும். ஒவ்வொன்றும் எழில் நலம் மிகுந்து காணப்படுகின்றன. திருச்சுற்று சந்நதிகளிலுள்ள நாராயணி சிற்பம், நவகிரக சிற்பங்கள் அருள் ததும்பும் விதமாக வீற்றிருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகப் பெருமான், பைரவர், சூரியன், தெய்வச் சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக உள்ளது. 108 வைணவ திவ்ய திருப்பதிகளில் பதினொன்று திருநாங்கூரில் அமைந்துள்ளது மிகவும் விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் 11 கருட சேவை உற்சவம் நடைபெறும். மிக மிக விசேஷம் இந்த 11 கருட சேவை உற்வசம் தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும். இதேபோன்று 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும். தலவிருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. திருநாங்கூர் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் தண்வயல் சூழ் தெய்வத் திருத்தலம். பதினொரு வைணவ திருப்பதிகளையும் 11 (ஏகாதசி) ருத்ரர்களையும் தரிசிப்போர்க்கு ஸ்ரீவைகுண்டம் திருக் கயிலாய் மகா தரிசனம் செய்த பெரும் புண்ணியம் சித்திக்கும். பதவி, பட்டம், புகழ், செல்வாக்கு, செல்வங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை பெறவும், இழந்த நல்ல விஷயங்களை மீண்டும் பெற்று ராஜயோகத்துடன் பரிபாலனம் செய்யக்கூடிய உச்சத்தை வாழ்வில் பெற இத்தல இறைவியான ஸ்ரீ ராஜமாதங்கியையும் ஸ்ரீ மதங்கீஸ்வரரையும் மனதாற வழிபட்டாலே போதும். திருத்தலம் நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநாங்கூரில் உள்ளது

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top