Sunday Jul 07, 2024

இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில்,

இடைக்காட்டூர்,

சிவகங்கை மாவட்டம் – 630602.

போன்: +91- 94438 3330

இறைவன்:

ஆழி கண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)

இறைவி:

சௌந்தர்ய நாயகி

அறிமுகம்:

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூரில் அமைந்துள்ள ஆழி கண்டீஸ்வரர் கோயில், சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஆழி கண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்) என்றும் அன்னை சௌந்தர்ய நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். தல விருட்சம் வில்வ மரம், தீர்த்தம் வைகை நதி. இக்கோயிலின் ஆகமம் சிவாகமமாகும். இடைக்காட்டூர் என்பது அதிவேக நெடுஞ்சாலைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள அமைதியான கிராமமாகும், இருப்பினும் மதுரையிலிருந்து (30 கிமீ) விரைவாக அடையலாம். பஞ்ச காலத்தில் நவகிரகங்களை விருந்தளித்த புகழ் பெற்ற சித்தர் இடைக்காடர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. ஒரு சிறிய நவக்கிரக கோவில் சாட்சியாக நிற்கிறது. இந்த கோவிலுக்கு ரஜினிகாந்த் ஆண்டுதோறும் சென்று வழிபடுவார்.

புராண முக்கியத்துவம் :

 முற்காலத்தில் இத்தலத்தில் நந்தர், யசோதை என்னும் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களது மகனாக பிறந்தவர் இடைக்காடர். இல்லறம், துறவறம் என இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் இவர், “இடைக்காடர்’ எனப்பட்டார். சிவபக்தரான இவர், இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தினமும் சிவபூஜை செய்து வழிபட்டார். சிவனருளால் சித்தர்களில் ஒருவரானார். இடைக்காடரை, சிவன் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார். பின் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

நம்பிக்கைகள்:

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் ஆழிகண்டீஸ்வரர், சவுந்தர்யநாயகி, பாலசுப்பிரமணியருக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

நவக்கிரக கோயில்: ஒருசமயம் நவக்கிரகங்களின் மாறுபட்ட நிலையால் பஞ்சம் உண்டானது. இதை முன்கூட்டியே அறிந்திருந்த இடைக்காடர், தனது ஆடுகளுக்கு எருக்கஞ் செடிகளை உண்ண பழகிக்கொடுத்து பஞ்சத்தை சமாளித்தார். இதையறிந்த கிரகங்கள், இடைக்காடரைக் காண அவரது இருப்பிடத்திற்கு வந்தன. இடைக்காடர், கிரகங்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்கவே, மகிழ்ந்த கிரகங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தன. அப்போது மழை பெருகும்வகையில் அவற்றின் திசைகளை மாற்றி விட்டார். உடன் மழை பொழிந்து பஞ்சம் நீங்கியது.

தாங்கள் திசை மாறியிருப்பதை அறிந்த கிரகங்கள், இடைக்காடர் மக்களின் நன்மைக்காக தங்களை மாற்றியதால் அந்த திசையிலேயே அமைந்தன. இந்த நிகழ்வு சித்தரின் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகத்திற்கென தனிக்கோயில் இருக்கிறது. தமிழ் வருடங்கள் அறுபதிற்கும், ஒவ்வொரு ஆண்டிற்குமான பலன்களை கணித்து பல சித்தர்கள் “வெண்பா’ இயற்றியுள்ளனர். இதில் “வெகுதான்ய’ வருடத்திற்கான பலனைக் கணித்தவர் இடைக்காடர். இவருக்கு திருவாதிரை நட்சத்திரத்தன்று விசேஷ பூஜை நடக்கிறது.

முருகனுக்கே பிரம்மோற்ஸவம்: வைகையின் வடகரையில் அமைந்த கோயில் இது. இத்தலத்து சிவன் தன்னை வணங்கும் பக்தர்களின் ஆழ் மனம் கண்டு, அருள் செய்பவராக இருக்கிறார். எனவே இவர் “ஆழிகண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் சவுந்தர்யநாயகி தனிசன்னதியில் இருக்கிறாள்.

சுவாமி, அம்பாள் சன்னதிக்கு நடுவில் சோமாஸ்கந்த அமைப்பில் பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவர் மிகவும் விசேஷமானவர். இது சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கே விழா எடுக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவ கோயில் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

திருவிழாக்கள்:

இக்கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி – மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி மற்றும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பங்குனி உத்திரம் ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இடைக்காட்டூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மானாமதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top