Wednesday Jul 03, 2024

அருள்மிகு பரோபித் சக்திப்பீடக் கோவில், பூட்டான்

முகவரி

அருள்மிகு பரோபித் தேவி சக்திப்பீடத் திருக்கோயில் பரோவில் உள்ள பிராஜோங், பூட்டான்

இறைவன்

சக்தி: பரோபித், உடல் பகுதி அல்லது ஆபரணம்: தொப்புள்

அறிமுகம்

பரோ என்பது பூட்டானின் பரோ பள்ளத்தாக்கில் உள்ள பரோ மாவட்டத்தின் ஒரு நகரம் ஆகும். இது பல புனித இடங்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் கொண்ட ஒரு வரலாற்று நகரமாகும். பரோபித் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் தொப்புள் பகுதி இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஜெய்கான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஜெய்கான்

அருகிலுள்ள விமான நிலையம்

பரோ

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top