அருள்மிகு ஜுகத்யா சக்திப்பீடக் கோவில், மேற்கு வங்காளம்

முகவரி
அருள்மிகு பரோபித் தேவி சக்திப்பீடத் திருக்கோயில் கிர்க்ராம், பர்பா பர்தாவன் மாவட்டம், மேற்கு வங்காளம் – 713 143
இறைவன்
சக்தி: ஜுகத்யா பைரவர்: க்ஷீர கண்டகர் உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது கால் கட்டை விரல்
அறிமுகம்
ஜுகத்யா சக்தி பீடக்கோவில் இந்து மதத்தில் பிரபலமான 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சக்தி பீடம் பர்தாவன் மாவட்டத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ள கிர்க்ராம் கிராமத்தில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் வலது கால் கட்டை விரல் இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜெய்கான்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஜெய்கான்
அருகிலுள்ள விமான நிலையம்
கொல்கத்தா