Saturday May 10, 2025

கர்னாலி குபேரபந்தாரி கோயில், குஜராத்

முகவரி :

கர்னாலி குபேர பந்தாரி கோயில்

கர்னாலி, வதோதரா மாவட்டம்,

குஜராத் மாநிலம் – 391105.

தொடர்புக்கு: 92656 03079, 98249 39377

இறைவன்:

குபேர பந்தாரி

அறிமுகம்:

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கர்னாலி என்னும் இடத்திலுள்ள குன்றில் குபேர பந்தாரி கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர். அமாவாசை, திங்களன்று சுவாமியை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும். வதோதராவில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இக்க்கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

நர்மதை நதிக்கரையிலுள்ள வனப்பகுதியில் ஒருநாள் சிவனும், பார்வதியும் நடந்து சென்றனர். களைப்பால் பார்வதிக்கு பசி, தாகம் ஏற்பட்டது. இப்பகுதியில் பாயும் நர்மதை நதியானது, சிவன், பார்வதிக்கு மகளாக கருதப்படுகிறது. ”நர்மதா… உன் தாயார் பார்வதி பசி, தாகமுடன் இருக்கிறாள். அவளுக்கு உதவி செய்” என்றார் சிவன். ஊற்றாக கிளம்பிய நர்மதை, உணவும் நீரும் அளித்தாள்.

சிறிது நேர ஓய்வுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் ராவணனின் தம்பியான அரக்கன் குபேரன் எதிர்ப்பட்டான். பார்வதியின் அழகைக் கண்ட அவன் ஆசை கொண்டான். அதன் எதிரொலியாக பார்வையை இழந்தான். பின்னர் தவறை உணர்ந்து சரணடைந்தான்.

மனமிரங்கிய பார்வதி பார்வையை வழங்கினாள். அவனை வடக்கு திசையின் காவலனாகவும், செல்வத்தின் அதிபதியாகவும் ஆக்கினார் சிவபெருமான். குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவரது திருநாமம் குபேர் பந்தாரி. சலவைக் கல்லால் ஆன சுவாமி முறுக்கு மீசை, தலைப்பாகை, மிரட்டும் விழிகளுடன் இருக்கிறார். நர்மதை நதியை படகில் கடந்த பின்னர் கோயிலை அடையலாம். மகாசிவராத்திரியின் போது பெருமளவில் பக்தர்கள் கூடுவர்.

திருவிழாக்கள்:

அமாவாசை, தீபாவளி, மகாசிவராத்திரி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கர்னாலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சந்தோட், வதோதரா

அருகிலுள்ள விமான நிலையம்

வதோதரா

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top