வழுவூர் வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், மயிலாடுதுறை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2018-01-18.jpg)
முகவரி :
அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,
வழுவூர்- 609401,
மயிலாடுதுறை மாவட்டம்.
போன்: +91- 4364 – 253 227.
இறைவன்:
வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்)
அறிமுகம்:
வழிக்கரையான் கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் தாலுகாவில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரபத்ரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். இக்கோயில் வீர சோழன் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. சாஸ்தாவின் பிறப்பிடமாக வழுவூர் கருதப்படுகிறது.
எலந்தங்குடியிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், மங்கநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும், பேரளத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும், குத்தாலத்திலிருந்து 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து 124 கிமீ தொலைவில் உள்ளது.
மங்கநல்லூருக்கு முன் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – மங்கநல்லூர் பேருந்து வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. எலந்தங்குடி அருகே உள்ள நெய்குப்பை வழுவூர் கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் பக்தர்கள் இறங்க வேண்டும். இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் கோயில் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது. கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை, கோமல், பேரளம் வழியாகவும் இதை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால் தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், கையில் பிட்சைபாத்திரத்துடன் பிட்சாடனாராக அங்கு வந்தார். திருமால், மோகினி வேடத்தில் அவருடன் சேர்ந்து கொண்டார். மோகினி வடிவிலிருந்த திருமாலைக் கண்ட ரிஷிகள், அவளது அழகில் மயங்கி, தாங்கள் செய்த யாகத்தை விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்தனர். பிட்சாடனார் வடிவிலிருந்த மிக அழகிய சிவனைக் கண்ட ரிஷிபத்தினிகள், தங்களது நிலை மறந்து அவர் பின் சென்றனர். பின்னர், தங்கள் நிலை உணர்ந்த ரிஷிகள், வந்திருப்பவர்கள் இறைவன் என அறியாமல், சிவன் மீது அக்னி, புலி, மான், மழு, நாகம் என பல ஆயுதங்களை எய்து போரிட்டனர். சிவன் அவற்றையெல்லாம் அடக்கி, தனது ஆபரணங்களாக்கிக் கொண்டார். முனிவர்கர் ஒரு யானையை அனுப்பினர். அதன் தோலைக் கிழித்த சிவன், கஜசம்ஹார மூர்த்தியாக காட்சி தந்தார். ரிஷிகளின் ஆணவம் அடங்கியது. பின்பு அவர்கள் உண்மையை உணர்ந்து சிவனை சரணடைந்தனர். சிவன் அவர்களை மன்னித்தருளினார். மோகினி வடிவில் இருந்த திருமாலுக்கும், சிவனுக்கும் சாஸ்தா பிறந்தார். அவரது பாதுகாப்பிற்காக சிவன், தனது அம்சமான வீரபத்திரரை காவலுக்கு வைத்துத் விட்டுச் சென்றார். இந்த வீரபத்திரரே இத்தலத்தில் காட்சி தருகிறார். பால சாஸ்தாவும் இங்கிருக்கிறார்.
நம்பிக்கைகள்:
குழந்தைகள் ஆரோக்யமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவும், அவர்கள் கல்வியில் சிறக்கவும் இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
வீரபத்திரரை “வழித்துணையான்’, “வழிக்கரையான்’ என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பைரவருக்கு நாய் வாகனம் இருப்பது வழக்கம். இங்கு வீரபத்திரருக்கு நாய் வாகனம் இருக்கிறது. திருமாலுக்கு பிறந்த சாஸ்தாவைக் காக்க வந்தவர் என்பதால் இவரது நெற்றியில் திருமாலுக்குரிய நாமம் இடுகின்றனர். சிவனுக்குரிய விபூதியை பிரசாதமாக தருகின்றனர். இவரைத் தவிர மற்றொரு வீரபத்திரர் நின்ற கோலத்தில் உள்ள சன்னதி இருக்கிறது. அருகில் தூண்டிவீரன், வாகை யடியான், லாடசன்னாசி, உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றனர்.
குழந்தைகளுக்கான வழிபாடு: பாலசாஸ்தா சன்னதி முன் மண்டபத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் இருக்கின்றனர். பிறக்கும் குழந்தைகள் நோயின்றி இருக்கவும், அவர்கள் கல்வியில் சிறக்கவும் இக்கோயிலில் பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கர்.
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/08/2018-01-18.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/08/2023-02-08.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எலந்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி