Friday Jun 28, 2024

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், (திருத்தஞ்சை மாமணிக்கோயில்) தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நீலமேகா பெருமாள் தஞ்சை மாமணி கொயில், சத்ய கிருஷ்ணா நகர், தஞ்சாவூர், தமிழ்நாடு 613002 போன்: 04362-223384 இறைவன் இறைவன்: நீலமேகப்பெருமாள் இறைவி: செங்கமலவல்லி அறிமுகம் திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் (மங்களாசாசனத் தலம்) ஒன்றாகும். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சைக்கருகில் வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் […]

Share....

திருநாகை சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், பெருமாள் சன்னதி, நாகப்பட்டினம், தமிழ்நாடு 611003, இந்தியா தொலைபேசி + 91-94422 13741, 4365 – 221 374. இறைவன் இறைவன் நீலமேகப்பெருமாள் இறைவி: சௌந்தர்யவல்லி அறிமுகம் திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன. நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். […]

Share....

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு லோகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி,,ஆழியூர் (வழி),கீவனூர்அஞ்சல், நாகப்பட்டினம் மாவட்டம்-611 104. போன்: 9245424565 இறைவன் இறைவன்: லோகநாத பெருமாள் இறைவி: லோகநாயகி தாயார் அறிமுகம் லோகநாதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம்-திருவையாறு சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கிமீ […]

Share....

திருகண்ணபுரம் (நீலமேகப்) சௌரிராஜப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சௌரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருகண்ணபுரம், அஞ்சல்,நாகப்பட்டினம் மாவட்டம்-609 704. போன்: 04366-270557 இறைவன் இறைவன்: நீலமேகப்பெருமாள், சௌரிராஜன், இறைவி: கண்ணபுரா நாயகி அறிமுகம் நீலமேகப்பெருமாள் கோவில்தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது. இக்கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில், நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பெருமாள் […]

Share....

திருகண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் பெருமாள் திருக்கோயில், திருகண்ணமங்கை அஞ்சல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்-610 104. இறைவன் இறைவன்: பக்தவத்சலப்பெருமாள் இறைவி: அபிஷேகவல்லி அறிமுகம் பக்தவத்சலப்பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினாறாவது திருத்தலம். மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை […]

Share....

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சாரனாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறைஅஞ்சல், கும்பகோணம்வட்டம்,தஞ்சைமாவட்டம்-612 605. போன்: 0435-2468001. இறைவன் இறைவன்: சாரநாதன் அம்மன்: பஞ்சலெட்சுமி அறிமுகம் சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினைந்தாவது திருத்தலம். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து […]

Share....

திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்), தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்)அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்-612 602. போன்: 0435-2467167, 2466857 இறைவன் மூலவர்:திருநறையூர் நம்பி அம்மன்: வஞ்சுளவல்லி அறிமுகம் திருநறையூர் நம்பி கோயில் அல்லது சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில் , தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோயில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் வைணவ திருநரையூர் நம்பி திருக்கோயில் எனும் […]

Share....

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஒப்பிலியப்பன்திருக்கோயில், திருநாகேஸ்வரம்அஞ்சல்,கும்பகோணம்வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் -612 204. போன்: 0435-2463385 இறைவன் இறைவன்: ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) இறைவி: பூமாதேவி அறிமுகம் உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் […]

Share....

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்

முகவரி அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் – 612 001 தஞ்சாவூர் மாவட்டம, போன்: 0435-2430349 இறைவன் இறைவன்: சாரங்கபாணி, ஆராவமுதன் இறைவி: கோமளவல்லி அறிமுகம் சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று […]

Share....

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோயில் திருஆதனூர், சுவாமி மலை (வழி), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்-612 302 போன்: 0435-2000503 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்) இறைவன் இறைவன்: ஆண்டளக்கும் ஐயன், இறைவி : ரங்கநாயகி அறிமுகம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினென்றாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் […]

Share....
Back to Top