Saturday Jul 06, 2024

மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்,

மேலச்செவல், அம்பாசமுத்திரம் தாலுக்கா,

திருநெல்வேலி – 627 452.

போன்: +91 44-24486660, 9940095670, 9443581917, 9443502744

இறைவன்:

நவநீத கிருஷ்ணன்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலச்செவலில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ணர் கோயில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலச்செவல் பல கற்றறிந்த அறிஞர்களின் இல்லமாக இருந்தது, மேலும் ஒருவர் நாள் முழுவதும் வேத மந்திரங்களை கேட்க முடியும். திருவிதாங்கூர் மன்னர்களின் (கி.பி. 14ஆம் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்த கோயில், குலசேகரன் பிரகாரத்தையும் தாயார் சந்நிதியையும் கட்டினார். கோயில் பெரிய ஏக்கர் வளாகத்தில் பரவியுள்ளது; இக்கோயிலில் சாலிகிராம மூலவர் தனது இரு உள்ளங்கைகளிலும் நெய்யை ஏந்தியபடி தனித்துவமாக நின்ற கோலத்தில் இருக்கிறார்.

நவநீத கிருஷ்ணர் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சந்தானப் பிராப்தியை அருளுவதாக நம்பப்படுகிறது. ரோகிணி நட்சத்திர நாளில் பால் பாயசம் அளித்து வழிபடுவார்கள். திருநெல்வேலிக்கு மேற்கே 26 கிமீ தொலைவில் பாபநாசம் நெடுஞ்சாலையில் தாமரைபரணிக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலச்செவல் கிராமம் முறையே மேகலிங்கேஸ்வரர், வேணுகோபால சுவாமி மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்று பழமையான கோவில்களின் உறைவிடமாகும்.

திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவிலும், சேரன்மகாதேவியிலிருந்து 8 கிமீ தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 24 கிமீ தொலைவிலும், வீரவநல்லூரிலிருந்து 14 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 185 கிமீ தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 73 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 155 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் பாபநாசம் இடையே ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் பேருந்துகள் உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் மற்றும் வீரவநல்லூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் மதுரை, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

வில்லிபுத்தூரார்க்கும் அவர் தம்பிக்கும் சொத்து பாகம் பற்றிய வழக்கில் இருவருக்குமே அரசினனின் அபிமான புலவர்களாக இருந்த காரணத்தினால், அவர்களை கண்டிக்க மனம் ஒப்பவில்லை. ஆனால் இருவரின் வழக்கையும் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசனுக்கு இருந்ததினால், இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் மகா பாரதத்தை தமிழில் பாடி தந்தால் வழக்கை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னார். அவ்வாறே இருவரும் உடன்பட்டு பாரதம் பாடத்தொடர்கிறார்கள். வில்லிபுத்தூரர் தான் எழுதிய வில்லி பாரத்தில் சமஸ்கிருத மொழியில் இருக்கும் பாரதத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க இந்த கிராமத்தில் இருக்கும் பண்டிதர்களுடன் ஆலோசித்து முடிவு செய்தார். சதுர்வேதி மண்டலம் என்று பெயர் பெற்ற இந்த கிராமத்தில் அந்த காலத்தில் சமஸ்கிருதம் மொழியை கரைகண்ட பண்டிதர்கள் வசித்து வந்தார்கள். படிப்பில் நாட்டமில்லாத வெள்ளிமலை கவிராயரை அவரது தந்தை திருச்செந்தூர் முருகன் கோவிலில் மடப்பள்ளியில் சேர்த்து விட்டார். முருகனுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்ததை கண்டு பெருமை கொண்டார். ஒருமுறை ஆடி கிருத்திகை நாளில் முருகனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் நடந்து கொண்டிருந்த காட்சியை பார்த்து ரசித்து கொண்டிருந்த கவிராயர் நைவேத்யம் தயார் செய்ய மறந்து விட்டார்.

குருக்கள் கவிராயரிடம் நைவேத்யம் கொண்டு வரும்படி கேட்ட போது தான் அவருக்கு தன் நினைவு வந்தது. தான் செய்த தவறை மன்னிக்கும்படி கேட்டும் அவரை கோயில் தர்மகர்த்தா அடித்து விரட்டி விட்டார். உடல் வேதனையும் மன உளைச்சளையும் தாங்காமல் தற்கொலை செய்யும் எண்ணத்தில் அருகில் இருந்த கடலின் ஆழப்பகுதியை நோக்கி சென்றார். அச்சமயம் முருக பெருமான் அவருக்கு தரிசனம் கொடுத்து நீ இந்த உலகில் பிறந்த காரணம் இன்னும் முடிவு பெறவில்லை. ஆகையினால் இந்த கிராமத்திற்கு சென்று அங்கு வசிக்கும் கிருஷ்ண சாஸ்திரியை பார்க்கவும் என்று கூறினார். சாஸ்திரியின் கனவிலும் பெருமாள் தோன்றி கவிராயருக்கு உதவி செய்யுமாறு கூறினார். கவிராயர் இந்த கிராமத்திற்கு வந்து சாஸ்திரியை சந்தித்தார். அவரிடம் திருச்செந்தூர் புராணம் சுவடியில் வடமொழியில் (சமஸ்கிருதம்) இருந்ததையறிந்து அவர் கூறகேட்டு அழகிய எளிய தமிழில் 900 செய்யுட்களாக எழுதினார். அதை திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அரங்கேற்றம் செய்ய நினைத்து தர்மகர்த்தாவை நேரில் சந்தித்து விபரங்கள் தெரிவித்து சம்மதம் கேட்டார்.

தர்மகர்த்தாவும் மற்ற நிர்வாகிகளும் கவிராயரை கேலி செய்து மடப்பள்ளியில் வேலை செய்த நீயாவது புராணத்தை எழுதுவது எப்படி என்று கூறி, சுவடுகளை அவரிடம் பறித்து கடலில் வீசிவிட்டார்கள். கடல், அலையால் சுவடிகள் இலங்கையில் மனைமுறி என்ற இடத்திற்கு அடித்து செல்லப்பட்டன. ஒரு நாள் அப்பகுதியில் குளித்து கொண்டிருந்த முருக பக்தர் ஒருவருக்கு இந்த சுவடிகள் கிடைத்தன. தன் வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் படித்து வந்தார். அச்சமயத்தில் சுக்ரவாசம் என்ற விஷக்காற்று அவ்வூரில் பல மக்களை பலி கொண்டது. ஆனால் இந்த முருக பக்தர் இருந்த தெருவில் மட்டும் அதனுடைய தாக்கம் இல்லாததை கண்டு அத்தெரு மக்கள் திருச்செந்தூர்புராணத்தின் மகிமையை அறிந்து அதை நகல் எடுத்து ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் வைத்து தினமும் படிக்க ஆரம்பித்தார்கள். இப்படி மகிமை வாய்ந்த இப்புராணம் தமிழில் தோன்றியதற்கு காரணமாக இருந்தது. இந்த கிராமம் தான். இன்னுமொறு கர்ண பரம்பரையாக கூறும் கதையானது, ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் கொடிய வெய்யிலின் தாக்கம் பொறுக்காமல் மேய்ப்பதை விட்டு விட்டு ஒரு மரத்தடியில் தூங்க சென்றுவிட்டான். அப்பொழுது ஒரு பாம்பு அவன் மேல் படர்ந்து, தலைக்கு மேல் கவசம் மாதிரி படம் எடுத்து நின்று விட்டது.

இதை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், பாம்பு சென்றவுடன் அவனை எழுப்பி எப்படி பாம்பானது அவனுக்கு நிழல் மாதிரி படம் எடுத்ததை கூறி அவன் பெரியவன் ஆனவுடன் பெரிய பதவிகளை அடைவாய் என்று கூறி சென்று விட்டான். அப்பொழுது என்னை மறக்காமல் ஒரு ஆலயம் கட்டு என்றும் கூறினான். அதிசயமாக அந்த சிறுவனும் பருவ வயசு அடைந்தவுடன், திருவாங்கூர் சமஸ்தானத்தில் வேலைக்கு அமர்ந்தான். தன்னுடைய நேர்மையாலும், திறமையினாலும் வெகுவேகமாக பதவி உயர்வடைந்து, மந்திரியாக அமர்ந்தான். அன்றொரு நாள் ஒரு சிறுவன் இதை கூறியதை தன் நினைவில் கொண்டு, சிறுவனை தேடினான். அச்சிறுவனின் முகம் நன்றாக ஞாபகத்தில் இருந்தும் முயற்சி செய்தும் காணமுடியவில்லை. ஒரு நாள் அவன் கனவில் குழந்தை கிருஷ்ணன் தோன்றி தனக்கு கோயில் எழுப்பச் சொன்னான். இக்கிராமத்தில் தான் அந்த மந்திரி கிருஷ்ணனுக்கு கோயில் எழுப்பினான். இவ்வாறு சிறப்பு வாய்ந்த கிராமம்தான் மேலச்செவல் இங்கு, நவநீத கிருஷ்ணன் வேணுகோபலன் மற்றும் மகாலிங்கேஸ்வர் மூவருக்கும் தனித்தனியே கோயில்கள் அமைத்திருப்பது மேலும் இந்த கிராமத்தின் சிறப்பு அம்சமாகும்.

நம்பிக்கைகள்:

திருமண தடைகள் நீங்க, கல்விபெற, வியாதிகள் நீங்க, கடன் தொல்லை தீர, வியாபாரம் பெறுக, விவசாயத்தில் அமோகமான விளைச்சல் பெற, நவநீத கிருஷ்ணன் அருள் கிடைப்பதாக நம்புகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

                 இக்கோயிலில் 730 ஆண்டுகள் பழமையான பஞ்சலோகத்தால் ஆன ராமானுஜர், சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர் ஆகிய உற்சவ விக்ரகங்கள் சிறப்பு வாய்ந்தவை. கண்ணப்ப நாயானார் சிவபெருமானுக்கு கண் அளிக்கும் சிற்பமும், ராமபிரான் வாலிக்கு தன் திறமையை காண்பிக்கும் பொருட்டு ஏழு மரங்களை துளைத்துக்கொண்டு செல்லும் அம்பும் சிறந்த சிற்பங்கள் உள்ளன. வைணவ ஆகம விதிப்படி கருங்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும். மூலக்கடவுள் திருநவநீத கிருஷ்ணன் குழந்தை வடிவில் தன் இருகைகளிலும் வெண்ணையை வைத்துக்கொண்டிருக்கும் கோலம். சாலக்கிராம கல்லினால் செய்யப்பட்ட விக்ரகம்.

இத்தகைய கோலத்தில் இருக்கும் நவநீத கிருஷ்ணன் கேரளாவில் 5 கோயில்களிலும் திருநெல்வேலியை சுற்றி 5 கோவில்களிலும் மூலவராக தரிசனம் செய்யலாம். யாதவ குல மக்கள் நிறைந்திருக்கும், இந்த கிராமத்தில் நவநீத கிருஷ்ணன் குலதெய்வமாகும். இவர்கள் தினந்தோறும் நைவேத்யம் செய்ய நெல்லும் விளக்குகளுக்கு தேவையான எண்ணை முதலியவைகளை தவறாமல் கொடுத்து வருகிறார்கள். 2000 வருடம் முதல் நவநீத கிருஷ்ணன் கண் திறந்து பக்தர்களை காப்பாற்றுவதாக நம்புகிறார்கள். அவர்களின் நிலங்களில் வாழையும் நெல்லும் சிறப்பாக விளைவதாக கூறுகிறார்கள். தாமிரபரணி புராணத்தில் மேலச்செவலின் வடமேற்கு பகுதியிலிருந்து கல்கி அவதாரம் நடைபெறும் என்று தெரிவிக்கிறது.

மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்து உற்சவரை டோலோத்சவம் நடத்தி நாமசங்கீர்த்தனம் செய்து குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தம்பதிகளின் நட்சத்திரம் கோத்ரம் பெயரில் விசேஷ அர்ச்சனைகள் செய்கிறார்கள். தம்பதியர்களின் பெயர் நட்சத்திரம் மற்றும் கோத்ரம் தெரிவித்தால் அன்றைய தினம் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். இந்த வகையில் நவநீதகிருஷ்ணனின் அனுக்ரஹம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பல வருடங்களாக இந்த பரிஹார பூஜை இந்த கோவிலில் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்:

ஒவ்வொரு வருடமும் தைபூசத்தன்று கலசாபிஷேகம் நடைபெறுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் ஐப்பசி, தை மாத பிறப்பு தினங்களில் கருட சேவை சிறப்பாக நடைபெறுகிறது. கோகுலாஷ்டமி, உரியடிதிருநாள், மார்கழி சயன ஏகாதசி, பின்பத்து திருநாள், திருகார்த்திகை, மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி ஆகியவை மிக சிறப்பாக நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலச்செவல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் மற்றும் வீரவநல்லூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top