Monday Jul 08, 2024

பாலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பாலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் கோயில், பாலூர், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ தெய்வநாயக பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாலூர் கிராமம். செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் செங்கல்பட்டு அடுத்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் செல்லும் எல்லா பேருந்துகளும் இவ்வூர் வழியாக செல்லும். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தெய்வநாயக பெருமாள். நின்ற கோலம். இந்த திருநாமத்தோடு தமிழகத்தில் இரண்டு கோயில்கள் தான் உள்ளன மற்றது திருநெல்வேலி மாவட்டத்தில் ஓன்று. இந்த விவரம் அக்கோயிலில் உள்ள செப்பேட்டில் காணப்படுகிறது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இடிந்துபோய் தற்போது ஓடு கொட்டகையில் இறைவன் வாசம் செய்கிறார். ஆனால் தற்போது அதுவும் இடிந்து போகும் நிலையில் உள்ளது. ஊர் மக்கள் யாரும் கோவிலுக்கு வருவதாக தெரிவதில்லை. சனிக்கிழமை மட்டும் இங்கு பூஜை நடைபெறுகிறது. கோவிலுக்கு அருகில் புல் செடிகள் முளைத்துள்ளன. தொடர்புக்கு திரு முருகன்-98429 09725, திரு பாலசுப்ரமணியன்-9791432068, திரு பாபு=9042900317.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top