Monday Jul 08, 2024

சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்- தேனி

முகவரி

சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்- சுருளிமலை , தேனி மாவட்டம்- 625 516,

இறைவன்

இறைவன்: சுருளிவேலப்பர்(சுருளி ஆண்டவர்)

அறிமுகம்

சுருளி வேலப்பர் கோயில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் நகருக்கு அருகில் உள்ள சுருளி மலையில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் சுருளி வேலப்பர் / சுருளி ஆண்டவர் என்று அழைக்கப்படுகிறார். வேலப்பர் கருவறையில் சிவன், விஷ்ணு, விநாயகர் காட்சிட் தருவது சிறப்பு. முருகன் குடிகொண்டதால் “நெடுவேள்குன்றம்” என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்துத் தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பது ஐதீகமாதலால் அனைவருக்கும் தனிசிலைகள் உள்ளன. அமாவாசை தலம்: ஆடி, தை மற்றும் புரட்டாட் சி மகாளய அமாவாசை நாட்கட் ளில் பக்தர்கர் ள் அருவியில் தீர்த்ர் த் மாடி, முன்னோருக்கு தர்ப்ர் ப்ணம் செய்கிறார்கர் ள். ஆடி அமாவாசை யன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு, சுருளி வேலப்பரே மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச்சடச் ங்குகள் செய்து வைத்தார். எனவே, ஆண்வாரிசு இல்லாதவர்கர்ளும், இறுதிக்காலத்தில் ஆறுதல் தேடுபவர்கர்ளும் இவரை தங்கள் மகனாக ஏற்று வழிபடுகிறார்கர்ள். இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இதனால் இங்கு விபூதி, குங்குமமும் தருகிறார்கர்ள், சடாரி ஆசிர்வார் தமும் செய்கிறார்கர்ள். உச்சிச்க்கால பூஜையின்போது துளசி தீர்த்ர் த் ம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்ர் த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தெட்சிட் ணாமூர்த்ர் த்தியும் இருக்கின்றனர். இவர், இடது கையில் சின்முத்திரையுடன் காட்சிட்யளிக்கிறார்.

புராண முக்கியத்துவம்

சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால்தான் இக்குகை கைலாசகுகை எனப்படுகிறது. மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை, மலையரசனான நம்பிராஜன் வளர்த்ர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமணசீராக நம்பிராஜன், தனது ஆட்சிட் க்குட்பட்ட்டட் மலைப்பிரதேசங்களைக் கொடுத்தார்.ர் அதில் இதுவும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒருசமயம் சனி பகவான், தன் சஞ்சாரப்படி தேவர்கர் ளைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கர்ள், தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்கர்ளுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவிகொட்டுட் வதால், “சுருதி’ எனப்பட்டட் தீர்த்ர்த்ம், “சுருளி’ என மருவியது. முருகனுக்கும் “சுருளி வேலப்பர்’ என்ற பெயர் ஏற்பட்டட்து. ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் இவர், “சுருளியாண்டி’ என்றும் அழைக்கப்படுகிறார். ராவணேஸ்வரன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்கர்ளை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்டட் எண்ணிய தேவர்கர் ள், ரிஷிகள், சித்தர்கர் ள் ஆகியோர் இங்குள்ளகை லாசநாதர் குகையில் மகாவிஷ்ணுதலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்கர்ளை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்கர்ளைக்காக்க மகாவிஷ்ணுபூதசொரூபத்துத்டன் பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவணேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கர்ள், ரிஷிகள்,சித்தர்கர்ள் தவம் புரிந்த கை லாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு விபூதிக்குகை, சர்ப்பகுகை, பாட்டையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. ஓம்கார’ வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்திட பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. குன்றுதோறாடல் கோயில்: திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர், மலைக்கோயில்களை “குன்றுதோறாடல்’ என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. சுருளி வேலப்பர், மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணர், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் உள்ளனர். இம்மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள். குகைக்குள் சிவதரிசனம்: இங்குள்ள ஒரு குகையில் கைலாசநாதர் (லிங்கம்) சன்னதியும், குகையின் மேலேயுள்ள குன்றில் முருகன் சன்னதியும் உள்ளன. இந்த குகையை “கைலாச புடவு’ (கைலாச குகை) என்கிறார்கள். குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையின் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து பூஜை செய்யலாம். குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. குகைக்குள் சென்று வருவதே யோகாசன பயிற்சி செய்வது போலாகும். கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. தீர்த்தம் பட்டு இந்த பாறையின் துகள்கள் வெண்ணிறத்தில் இருக்கிறது. இந்த துகளையே பிரசாதமாக தருகிறார்கள்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானத

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சுருளிமலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தேனி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top