Tuesday Jul 02, 2024

காவாந்தண்டலம் சோளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

காவாந்தண்டலம் சோளீஸ்வரர் திருக்கோயில், காவாந்தண்டலம் காஞ்சிபுரம் மாவட்டம் – 631501.

இறைவன்

இறைவன்: சோளீஸ்வர சுவாமி இறைவி: சுந்தராம்பாள்

அறிமுகம்

காவாந்தண்டலம் சோளீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் சோளீஸ்வர சுவாமி, சுந்தராம்பாள் சன்னதிகளும், நவக்கிரகம், முருகர், உற்சவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் திருவிழாவாக நடைபெறுகிறது.

புராண முக்கியத்துவம்

இந்த கிராமத்தின் பெயர் கச்சியப்பர் தண்டலம் என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இது காலப்போக்கில் காவாந்தண்டலம் என்று மாறியது. காஷ்யப முனிவரால் கைலாசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட லிங்கம் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. காசியப்ப முனிவர் என்ற ஒரு துறவி இந்த கிராமத்தில் வாழ்ந்து தியானம் செய்ததன் விளைவாக இந்த பெயர் வந்தது. காசியபர் என்ற முனிவர் தன் தாய்-தந்தையோடு புனிதயாத்திரை புறப்பட்டு ஒவ்வொரு ஊராகப் போய்க் கொண்டிருந்தார். வருகிற வழியில் அவரது தாய் மற்றும் தந்தையர் திடீரென இறந்து போகின்றனர். எனவே, அவர்களுக்கு உண்டான ஈமச் சடங்குகளைச் செய்து முடித்து விட்டு. அஸ்தியைச் சேகரித்துக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார். காசி மாநகரத்தில் ஓடும் கங்கை நதியில் இந்த அஸ்தியைக் கரைத்து விட வேண்டும் என்பது அவரது எண்ணம். அப்படி வந்து கொண்டிருந்தவர் ஒரு தினம் காஞ்சி மாநகரத்தின் அருகே உள்ள இந்த ஊரை (காவாந்தண்டலம்) அடைந்தார். இந்த ஊரில் ஓடும் செய்யாறு நதியின் ஆரவாரத்திலும், பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழ்நிலையிலும் மனதைப் பறிகொடுத்து, இங்கேயே ஒரு சோலை அமைத்துத் தங்கினார். தினமும் செய்யாற்றில் புனித நீராடிவிட்டு, ஈசனை நினைந்து தியானம் செய்வார். சிவ தியானத்தில் நாட்களைக் கடத்தினார். அப்போது ஒரு நாள் ஈசன் அசரீரி வாக்காக, கயிலையில் இருந்து எம் வடிவத்தை எடுத்து வந்து இந்த ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய். உன் பெற்றோரின் அஸ்தியைக் கரைக்க இனி நீ காசிக்குச் செல்ல வேண்டாம். இந்த செய்யாற்றிலேயே கரைத்து விடு. காசியில் கரைத்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும் என்று அருளி இருக்கிறார். மூலவர் சோழீஸ்வரர் என்றும், தாயார் சுந்தராம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். இது ஒரு பழமையான கோவில் மற்றும் மிகவும் சிறியது. இது செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

நம்பிக்கைகள்

பித்ரு தோஷம் நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள சோளீஸ்வரரை வழிபடுகின்றனர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காவாந்தண்டலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வாலாஜாபாத்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top