Sunday Oct 06, 2024

பெரும்புகளூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

பெரும்புகளூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,

பெரும்புகளூர், நன்னிலம் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610104.

இறைவன்:

அகத்தீஸ்வரர்

இறைவி:

 சிவகாமசுந்தரி

அறிமுகம்:

திருவாரூரின் அருகாமை பகுதிகள் இந்த பெரும்புகளூர். இந்த பெரும்புகளூர் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள் கருணாகரநல்லூர் நீலக்குடி பொம்மாநத்தம் தியாகராஜபுரம் ஆகியவை. திருவாரூர் அருகே அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு பெரும்புகளூர், நீலக்குடி, தியாகராஜபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நிலங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு இரண்டு சிவன்கோயில்கள் உள்ளன. முதலாவதுகோயில் பெரிய குளத்தின் கரையில் உள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி சிவகாமசுந்தரி அகத்திய பெருமான் தென்னகம் வந்தபோது பல தலங்களில் லிங்க வழிபாடு செய்தார். அவ்வாறு லிங்க வழிபாடு செய்த தலங்களில் ஒன்று இந்த பெரும்புகளூர்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் முற்றிலும் சிதைவடைந்து போனதால் அனைத்து மூர்த்திகளும் ஒரு கூரை கொட்டகையில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. புதிய கோயில் எழுப்ப ஊர் மக்களும், அரன் பணி அறக்கட்டளையினரும் இணைந்து பணி செய்து வருகின்றனர். கிழக்கு நோக்கியபடி இறைவனுக்கும், தெற்கு நோக்கியபடி இறைவிக்கும் கருவறைகளும், விநாயகர் முருகன் ஆகியோருக்கும் சிற்றாலயங்களும் எழும்பி உள்ளன. நிறைவு பணிகள் மட்டுமே உள்ளன. முடிந்தவுடன் குடமுழுக்கு செய்ய தயாராகிவிடும்

”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரும்புகளூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top