Saturday Oct 05, 2024

அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர்

முகவரி

அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர் திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612105

இறைவன்

இறைவன்: வீற்றிருந்த பெருமாள்

அறிமுகம்

வீற்றிருந்த பெருமாள் கோவில், விஷ்ணுக்குரிய கோவிலாகும். இக்கோவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள வேப்பத்தூர் கிராமத்தில் உள்ளது. கற்கள் மற்றும் சாந்து கொண்டு அமைக்கப்பட்ட இந்த விஷ்ணு கோவில் கிபி 850 களில் பல்லவ மன்னர்களாலும் பின்னர் சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனாலும் அதற்குப் பிறகு 1520 களில் கிருஷ்ணதேவராயராலும் கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. செங்கல்லால் ஆன பழைய கோவிலுக்கு மேல் இக்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில், பல்லவர் காலத்துக்கும் முந்தைய கோவில்களாக அறியப்பட்டுள்ள மிகவும் பழமையான இரண்டு கோவில்களில் இக்கோவில் ஒன்றாகும். மற்றொன்று சாளுவண் குப்பத்தில் 2004 சுனாமிக்குப் பின் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுப்பிரமணியர் திருக்கோவில். வீற்றிருந்த பெருமாள் கோயில் புதுப்பித்தலுக்காகக் காத்திருக்கிறது.

புராண முக்கியத்துவம்

சுமார் 40 அடி உயரத்தில் கூரையால் மூடப்பட்ட விமானம். தற்போது தமிழகத்தில் இவ்வாறாக செங்கல் கட்டுமானத்துடன் கூடிய விமானம் எதுவும் இல்லை. சிதைந்த நிலையில் உள்ள கட்டட அமைப்புகள் ஒரு காலத்தில் இக்கோயில் சிறப்பான நல்ல நிலையில் கட்டுமானத்தோடு இருந்ததை உணர்த்துகிறது. தரைப்பகுதியிலிருந்து மேடை போன்று சற்று உயர்ந்த நிலையில் சென்றால் கருவறையை அடையலாம். கருவறைக்கு மேல் தஞ்சாவூர் பெரிய கோயிலின் விமான உட்புறத்தில் காணப்படும் கூடு போன்ற அமைப்பு காணப்படுகிறது. கருவறையில் மூலவரோ அருகில் உள்ள கட்டுமானங்களில் பிற தெய்வங்களோ இல்லை. மூலவரையும் பிற சிற்பங்களையும் தனியாக அருகே ஒரு அறையில் காணலாம். கருவறையின் உட்பக்கச் சுவரில் ஓவியங்களைக் காணமுடியும்.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வேப்பத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top