Monday May 19, 2025

காலில் சங்கிலியுடன் அனுமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அமைந்துள்ளது மேல்முடியனூர். இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆஞ்சநேயரின் கால், கல்லால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் அனுமனையும் வரும்படி அழைத்தார். ஆனால் அனுமனோ, “பூலோகத்தில் எங்கெல்லாம் ராமகீர்த்தனம் கேட்கிறதோ.. அங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறிவிட்டார். ராமர் மீண்டும் அழைத்தால், அவர் மேல் உள்ள பக்தியில் மனம் […]

Share....

எண்ணிக்கை வடிவங்களில் விநாயகர்

முழு முதற்கடவுளான  விநாயகப்பெருமான்  உலகெங்கும்  போற்றும் தெய்வமாகத் திகழ்கின்றார்.  இவரை ஒரு  விநாயகர் முதல்  கோடி விநாயகர் வரை எண்ணிக்கை  வடிவங்களில்  வழிபடுவதை  இங்கே காண்போம். 1. ஏகதந்தன்                 ஏகம் என்பது ஒன்றைக் குறிப்பது.  ஏகாட்சரன், ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன், ஒற்றை மழுவன் என ஒன்று எண்ணிகையில், விநாயகர் வணங்கப்படுகின்றார். 2. இரட்டைப் பிள்ளையார்                 ஒரு தெய்வத்தை இரண்டாக வைத்து வழிபடும் வழக்கம்,  பலநூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இவர் இரட்டைப் பிள்ளையார் என வழங்கப்படுகின்றார்.  இந்த […]

Share....

ச்ராத்தம் உண்டானது எப்படி?

உலகில் முதலில் ச்ராத்தம் உண்டானது எப்படி என்று அறிந்துகொள்வது அவசியம். அது ஸ்ரீமன் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 138வது அத்யாயத்தில் பரக்க நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். அதைப்பற்றி ‘ஸ்ரீவேதாந்த தீபிகை’யில் அடியேன் படித்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். ப்ருஹ்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மஹரிஷி உண்டானார். அந்த மஹரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் […]

Share....
Back to Top