Wednesday Oct 02, 2024

லோனி பாப்கர் பைரவ்நாதர் கோவில், மகாராஷ்டிரா

முகவரி : லோனி பாப்கர் பைரவ்நாதர் கோவில், மகாராஷ்டிரா  லோனி பாப்கர், மகாராஷ்டிரா 413110 இறைவன்: பைரவநாதர் இறைவி: பைரவ யோகேஸ்வரி அறிமுகம்:  பைரவநாதர் கோயில் புனேவில் இருந்து தென்கிழக்கே 80 கிமீ தொலைவில் உள்ள லோனி பாப்கரின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது, பைரவநாதர் கோயில் கிராமத்தில் பேருந்து நிறுத்தமாக இருந்தது. முதல் பார்வையில் பைரவநாதர் கோயில் ஒரு பொதுவான பிற்பகுதியில் மராட்டிய பாணி கோயிலாக இருப்பதற்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. முன்னால் உள்ள சபாமண்டபத்தில் ஒவ்வொரு […]

Share....

பாதம்பா சிங்கநாதர் கோவில், ஒடிசா

முகவரி : பாதம்பா சிங்கநாதர் கோவில், ஒடிசா கோபிநாத்பூர், படாம்பா, கட்டாக் மாவட்டம்,  ஒடிசா 754031 இறைவன்: சிவன் அறிமுகம்: சிங்கநாதர் கோயில் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரால் வழிபடப்படும் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ரேகா மற்றும் கலிங்கன் முறையின் பாரம்பரிய பாணியில் மாடி கூரை ஜகமோகனம் உள்ளது. சைவ மற்றும் வைணவ பிரிவினரின் சிற்ப அலங்காரத்திற்காக இந்த கோவில் தனித்துவமானது. இது இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பா தாலுகாவில் உள்ள கோபிநாத்பூர் […]

Share....

கிஷினாபூர் சடேஸ்வர் மகாதேவ் கோவில், ஒடிசா

முகவரி : கிஷினாபூர் சடேஸ்வர் மகாதேவ் கோவில், ஒடிசா கிசினாபூர், கட்டாக் மாவட்டம், ஒடிசா 754200 இறைவன்: சிவன் அறிமுகம்:  சடேஸ்வர் கோயில் இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும், இது மகாதேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கட்டாக் மாவட்டத்தில் உள்ள சாலிபூரின் கிஷினாபூர் கிராமத்தில் (பாகா-கோபிநாத்பூருக்கு அருகில்) அமைந்துள்ள படலபூத சிவலிங்க கோயிலில் இதுவும் ஒன்றாகும். . கட்டாக்கில் இருந்து ஜகத்பூர் வழியாக சாலை வழியாக எளிதில் அணுகலாம். புராண முக்கியத்துவம் :  சைவம் மற்றும் சாக்தம் […]

Share....

நிர்த்தனமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : நிர்த்தனமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில், நிர்த்தனமங்கலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611102. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்:                                                 நாகப்பட்டினத்தின் மேற்கில் உள்ள நாலுரோட்டில் இருந்தது வேளாங்கண்ணி சாலையில் 11 கிமீ சென்றால் பரவை கிராமம், இதன் மேற்கில் செல்லும் சாலையில் 3 கிமீ தூரம் சென்றால் நிர்த்தனமங்கலம் கிராமம் உள்ளது. நிர்த்தனம் – நர்த்தனம் இரண்டும் நடனம் எனும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை […]

Share....

சீர்காழி பதினெண்புராணேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை

முகவரி : பதினெண்புராணேஸ்வரர் திருக்கோயில், சீர்காழி நகர், மயிலாடுதுறை மாவட்டம் – 609110. இறைவன்: பதினெண்புராணேஸ்வரர் இறைவி: வாகீஸ்வரி அறிமுகம்: சீர்காழியின் மையப்பகுதியில் உள்ளது சட்டநாதர் கோயில், இந்த பெரியகோயிலின் நாற்புறங்கள் தேரோடும் சாலைகள் அமைந்துள்ளன. இதன் வடகிழக்கு மூலையில் உள்ளது ஈசான்யதெரு. இந்த தெருவில் கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக பதினெண் புராணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பதினெண் புராணங்களை ஒன்றிணைக்கும் பணிகளில் புலவர்கள் ஈடுபட்ட போது சிவபெருமான் புராணங்களை ஒன்றிணைக்கும் தலைவர் ஆக இருந்ததாக வரலாறு, இதனால் […]

Share....

ஓரத்தூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஓரத்தூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், ஓரத்தூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611102. இறைவன்: அக்னிபுரீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம்: நாகப்பட்டினத்தின் மேற்கில் உள்ள நாலுரோட்டில் இருந்தது வேளாங்கண்ணி சாலையில் 11 கிமீ சென்றால் பரவை கிராமம், இதன் மேற்கில் நாகை மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் மருத்துவக்கல்லூரியின் பின்புறம் உள்ளது இந்த சிவன் கோயில். இப்பகுதி ஓரத்தூர் கிராமத்தை சேர்ந்தது. இக்கோயிலையும் சேர்த்து இரு சிவன் கோயில்கள் உள்ளன […]

Share....

ஓரத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஓரத்தூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், ஓரத்தூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611102. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: நாகை-வேதாரண்யம் சாலையில் உள்ள பாப்பாகோயிலில் இருந்து விக்கினபுரம் செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் வந்து, நரியங்குடியில் இடதுபுறம் செல்லும் ஓரத்தூர் சாலையில் திரும்பி 3கிமீ சென்றால் ஓரத்தூர் கிராமத்தை அடையலாம். பிரதான சாலையின் வலது புறம் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியும் அதனருகில் கமலா நயன வாசுதேவ பெருமாள் கோயில் ஒன்றும், சாலையின் இடதுபுறம் […]

Share....

தக்காளி காணிக்கை!

காரைக்குடி நகரின் அருகே உள்ள முத்துப்பட்டினம் எனும் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் முத்து மாரியம்மன். சமயபுரத்திலிருந்து இங்குவந்து பல சித்து விளையாடல்கள் புரிந்த சிறுமி ஒருத்தியின் நினைவாக இந்தக் கோயில் அமைந்ததாகச் சொல்கிறார்கள். அந்தச் சிறுமியின் வேண்டுகோளின்படி இந்த ஆலயத்தில் அம்மனுக்குத் தக்காளிப் பழமே காணிக்கையாகத் தரப்படுகிறது. மேலும், அம்மனுக்குத் தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுவதும் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும் Share….

Share....

காஞ்சீபுரம் வைரவேச்சுரம்

கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார். காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது […]

Share....

கோவில்களின் தொன்மை குறித்த அறிவு இல்லை: முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் காட்டம்

செங்கல்பட்டு: -செங்கல்பட்டு, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை அருளாளீஸ்வரர் கோவில் உள்ளது. ஓராண்டாக, அந்த பகுதியைச் சேர்ந்த சிவா சங்கீதா, கோவில் பற்றி தெரிவித்தார். இந்த கோவில் கருவறை, விமானம் ஆகியவை, தற்போது காப்பாற்றப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சுவர்கள், உள்ளே இருந்த கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. அந்த கோவிலை […]

Share....
Back to Top