Thursday Jul 04, 2024

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை — 600 004. போன்: +91 -44-2498 5112, 2466 2039, 94440 18239.

இறைவன்

இறைவன்: மாதவப்பெருமாள் இறைவி: அமிர்தவல்லி

அறிமுகம்

தமிழ்நாட்டில் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள மாதவப்பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிட பாணியிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.இறைவன் மாதவ பெருமாள் மற்றும் அவரது துணைவியார் லட்சுமி அமிர்தவள்ளியாக காட்சியளிக்கிறார்.கி.பி ஆறிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.அவர்களுள் முதலாழ்வார் என அழைக்கப்படுபவர் பேயாழ்வார்.பேயாழ்வாரின் பிறப்பிடமாக இக்கோவில் கருதப்படுகிறது. இந்த கோயில் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.இந்த கோயில் தமிழக அரசின் இந்து மத மற்றும் இந்துசமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

திருமாலின் சாந்த குணத்தை சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி, அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி, சுவாமியை பிரிந்தார். தன் தவறுக்கு பிராயச்சித்தம் பெற விரும்பிய பிருகு மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி, இத்தலத்தில் தவமிருந்தார். மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். லட்சுமி, அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, “அமிர்தவல்லி’ எனப்பெயரிட்டு வளர்த்தார் பிருகு. அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர். மாதவ பெருமாள் கோயில் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது மற்றும் இரண்டு நிலப்பரப்புகளைக் கொண்டது. இக்கோயில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் புறநகர்ப் பகுதியான மைலாப்பூரில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் 10 அடி (3.0 மீ) உயரமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு செவ்வக திட்டம் உள்ளது.மேலும் 5 அடுக்கு கோபுரமும், நுழைவாயில் கோபுரத்தால் துளைக்கப்பட்டுள்ளது. கருவறைதெய்வத்தின் சிலை கிரானைட்டால் செய்யப்பட்ட ஒரு உருவமாகும்.இறைவனின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியின் உருவங்களுடன் அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகிறது.மத்திய சன்னதிக்கு பின்னால் அமைந்துள்ள விஷ்ணுவின் அவதாரமான வராஹாமூர்த்திக்கு ஒரு சிறிய சன்னதி உள்ளது.மத்திய ஆலயத்திற்கு செல்ல நினைத்தால் ஒரு வழிபாட்டு மண்டபம் மற்றும் குறுகிய அர்த்த மண்டபம் வழியாக செல்லலாம்.கொடிமரம் கருட சன்னதிக்கு பின்னால் அமைந்துள்ளது.இருபுறமும் உள்ள வழிபாட்டு மண்டபத்தில் ஆழ்வார்கள் படங்கள் உள்ளன, அமிர்தவள்ளி சன்னதி கோயிலின் மேற்குப் பகுதியில் இரண்டாவது இடத்தில் அமைந்துள்ளது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள மூலவர் அமர்ந்த திருமண கோலத்தில் அருளுகிறார். இவருக்கு கல்யாண மாதவன் என்ற பெயரும் உள்ளது. மூலவரின் விமானம் ஆனந்த நிலை என அழைக்கப்படுகிறது.வேதவியாசர் நாரதரிடம் பூலோகில் தோஷம் இல்லாத தலம் எது என்று கேட்க, அவர் இத்தலத்தை கூறினாராம். இத்தலத்தில் மாதவப்பெருமாள், அமர்ந்த திருமணக்கோலத்தில் இருக்கிறார். அமிர்தவல்லித்தாயார் சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இங்குள்ள புஷ்கரிணியில் ஒரு மாசி மகத்தன்று குழந்தையாக தோன்றினாள். எனவே இத்தீர்த்தம், “சந்தான புஷ்கரிணி’ என்றழைக்கப்படுகிறது. தாயார் அவதரித்த நாளில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இத்தீர்த்தத்தில் சங்கமித்ததாம். இதன் அடிப்படையில் மாசி மகத்தன்று இங்கு விழா நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டும் தாயார், சுவாமியுடன் சேர்ந்து தீர்த்தக்குளத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது தீர்த்த நீராடி, தாயாரை வணங்கிட பாவம் நீங்கி, புண்ணியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் மூன்றும் சேர்ந்த கலவையை நைவேத்யமாக வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால் குழந்தைப்பேறு உண்டாவதாக நம்பிக்கை. உற்சவர் தாமரை மலர் போன்று, அழகான முகத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர், “அரவிந்த மாதவன்’ என்று அழைக்கப்படுகிறார். அரவிந்தம் என்றால், தாமரை என்று பொருள். சதய நட்சத்திர நாட்களில் இவர், வீதி புறப்பாடாகிறார். சம்பத்குமாரர்: பெருமாள் தலங்களுக்கு யாத்திரை சென்ற ராமானுஜர், கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்குச் சென்றார். அங்கு உற்சவர் சம்பத்குமாரர் இல்லை. கலங்கிய ராமானுஜர், டெல்லியை ஆண்ட மன்னர் தன் மகளின் விருப்பத்திற்காக சிலையை கொண்டு போனதை அறிந்தார். பின்பு டெல்லி சென்ற அவர், திருமாலை வேண்டி வணங்கினார். அப்போது மன்னரின் அரண்மனையில் இருந்த பெருமாள் சிலை, அவரது மடியில் வந்தது. அச்சிலையை நாராயணபுரம் கொண்டு வந்த ராமானுஜர், மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த சம்பத்குமாரர் இங்கு உற்சவராக இருக்கிறார். இவரது பாதத்தில் டெல்லி மன்னரின் மகள் பீபி பீ நாச்சியார் இருக்கிறாள். இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே இவருக்கு, “செல்வப்பிள்ளை’ என்ற பெயரும் உண்டு. பங்குனியில் சம்பத்குமாரருக்கு 10 நாட்கள் விழா நடக்கிறது. இவ்விழாவில் சுவாமி, ராமானுஜர் மடியில் அமரும் வைபவம் பிரசித்தி பெற்றது. பேயாழ்வார் அவதார தலம்: முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள மணிகைரவம் என்னும் கிணற்றில், செவ்வல்லி மலரில் அவதரித்தவர். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது. திருக்கோவிலூர் தலத்தில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நிற்கச்செய்து அருளினார் திருமால். இதன் அடிப்படையில் இவ்விழாவில் மூன்று ஆழ்வார்களும் ஒன்றாக காட்சி தரும், “திருக்கோவிலூர் வைபவம்’ நிகழ்ச்சியும், பத்தாம் நாளில் பிறந்த தலமான கிணற்றிற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார். இந்த வைபவம், ஐப்பசி திருவிழாவின் 4ம் நாளில் நடக்கிறது. தாயார் சன்னதி முன்மண்டப தூண்களில் இவர் கிளி, யானை, குதிரை, சூரிய பிரபை மற்றும் அம்ச வாகனங்களில் காட்சி தரும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

திருவிழாக்கள்

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்

காலம்

800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மயிலாப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருமயிலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top