Tuesday Sep 17, 2024

பெசாகி கோயில், இந்தோனேசியா

முகவரி

பெசாகி பெரிய கோவில் ஜி.குனங் மாஸ், கபுபடென் கரங்கசெம், பாலி 80863, இந்தோனேசியா

இறைவன்

இறைவன்: சிவன், விஷ்ணு, பிரம்மன்

அறிமுகம்

பெசாகி கோயில் இந்தோனேசியாவின் கிழக்கு பாலியில் உள்ள அகுங் மலையின் சரிவுகளில் உள்ள பெசாகி கிராமத்தில் உள்ள ஒரு புரா வளாகத்தில் அமைந்துள்ளது. புரா என்பது கோயிலையே குறிக்கிறது. இது பாலியில் உள்ள இந்து மதத்தின் மிக முக்கியமான, மிகப்பெரிய மற்றும் புனிதமான கோயில் ஆகும். மற்றும் பாலினிய கோயில்களின் வரிசையில் ஒன்றாகும் . குனுங் அகுங்கின் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் 23 தனித்தனியான ஆனால் ஒன்றோடொன்று தொடர்புடைய கோயில்களின் விரிவான வளாகமாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமானது புரா பெனடரன் அகுங் ஆகும். இந்த கோயில் ஆறு நிலைகளில் கட்டப்பட்டுள்ளது, சாய்வாக அமைந்துள்ளது. நுழைவாயிலில் ஒரு பிளவு நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கோரி அகுங் எனப்டுகின்ற இரண்டாவது முற்றத்திற்கான நுழைவாயில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

கோயில் எப்போதிருந்து இருந்து வருகிறது என்பதான குறித்த துல்லியமான விவரம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் ஒரு புனித தலமாக அதன் முக்கியத்துவம் கிட்டத்தட்ட வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே தொடங்குகிறது. பூரா பெனடரன் அகுங் மற்றும் பல கோயில்களின் கல்லால் ஆன தளங்கள் மெகாலிதிக் ஸ்டெப் பிரமிடுகளை ஒத்த நிலையில் அமைந்துள்ளன. அவை குறைந்தது 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. 1284 ஆம் ஆண்டு முதல், முதல் ஜாவானிய வெற்றியாளர்கள் பாலியில் குடியேறிய காலம் தொடங்கி இக் கோயில் இது உறுதிமாக இந்து வழிபாட்டுத் தலமாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 15 ஆம் நூற்றாண்டில், பெசாகி ஒரு சக்திவாய்ந்த, கெல்கல் வம்சத்தின் மாநிலக் கோயில் என்ற நிலையைப் பெற்றது.

சிறப்பு அம்சங்கள்

புரா பெசாகி என்பது இருபத்தி மூன்று கோயில்களால் ஆன ஒரு வளாகமாகும். அவை இணையான முகடுகளில் அமைந்துள்ளன. இது பல மாடி மற்றும் செங்கல் நுழைவாயில்களுக்கு ஏறும் மாடி மற்றும் மாடிப்படிகளின் படிகளைக் கொண்டு காணப்படுகிறது. இது பூரா பெனடரன் அகுங் என்று அழைக்கப்படும் பிரதான மேரு அமைப்புக்கு வழிவகுக்கிறது. இவை அனைத்தும் ஒரே வடிவிலான அச்சில் சீரமைக்கப்பட்டு, ஆன்மீக எண்ணம் கொண்டு செல்வோரை மேல்நோக்கி மற்றும் புனிதமாகக் கருதப்படும் மலைக்கு நெருக்கமாக வழிநடத்திச் செல்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வளாகத்தின் முக்கியமான இடமாகக் கருதப்படுவது புரா பெனடரன் அகுங் ஆகும். பிரதான இடத்தின் குறியீட்டு மையம் தாமரை சிம்மாசனம் அல்லது பத்மாசனம் எனப்படும். அந்த இடம்தான் முழு வளாகத்தின் சடங்கின் மையமாகக் கருதப்படுகிறது. இது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். 1963 ஆம் ஆண்டில் அகுங் மலையின் தொடர்ச்சியான வெடிப்புகள். இதனால் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்டனர். பூரா பெசாகிக்கும் அதனால் பாதிப்பு ஏற்பட்டது. எரிமலையின் தாக்கம் கோயில் வளாகத்தை விட்டு சில மீட்டர் தொலைவில் சென்றுவிட்டது. ஆதலால் கோயிலுக்கு அதிக பாதிப்பு எதுவும் இல்லை. கோயில் இவ்வாறாகக் காப்பாற்றப் பட்டதை பாலினிய மக்கள் ஒரு பெரிய அதிசயமாகவே நினைக்கின்றனர். மேலும் அவர்கள் கடவுளர்கள் தங்கள் சக்தியை நிரூபிக்க விரும்பிய ஒரு அடையாளமாக, அழிப்பதற்கு அல்ல, என்று பாலினியர்கள் நம்புகின்றனர். அந்த அளவிற்கு அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

திருவிழாக்கள்

ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது எழுபது திருவிழாக்கள் ஒவ்வொரு கோயில் வளாகத்திலும் நடத்தப்படுகின்றன. இந்த விழாச் சுழற்சியனது 210 நாள் பாலினிய பாவுகான் காலண்டர் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட நிலையில் அமைந்துள்ளது. இக்கோயில் 1995 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உலக பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் அத்தகுதியைப் பெறவில்லை.

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெசாகி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரங்கசெம்

அருகிலுள்ள விமான நிலையம்

நுரா ராய் சர்வதேச விமான நிலையம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top