Thursday Jul 04, 2024

பர்வதமலை ஸ்ரீ மல்லிகா அர்ஜுனசுவாமி & ஸ்ரீ பிரம்மராம்பிகை திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி

பர்வதமலை ஸ்ரீ மல்லிகார்ஜுனசுவாமி & ஸ்ரீ பிரம்மராம்பிகை திருக்கோயில், பார்வதமலை, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு 606901

இறைவன்

இறைவன்: ஸ்ரீ மல்லிகார்ஜுனசுவாமி இறைவி: பிரம்மராம்பிகை

அறிமுகம்

மலை மற்றும் குன்றின் மீது பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அத்தகைய மலைக்கோயில்களில் ஒன்று பர்வத மலையில் உள்ள ”மல்லிகார்ஜுனா கோவில்”. பர்வதமலை ஜவாதி மலைகளின் ஒரு பகுதியாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சிவன் ஆவார். மேலும் அன்னை ஸ்ரீ பிரம்மராம்பிகை என்று அழைக்கப்படுகிறார். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை, 500 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வழிபட்டு வருவதாக கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார். பர்வதமலை குன்றின் மீது இந்த கோவில் அமைந்துள்ளது. போளூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள தென்மஹாதேவமங்கலம் கிராமத்தில் பர்வதமலை அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வடக்கே 35 கிமீ தொலைவில் போளூர் உள்ளது.

புராண முக்கியத்துவம்

கி.பி. 3ம் நூற்றாண்டில் மாமன்னர் நன்னன் என்னும் அரசன் இங்கு வந்து இறைவனை வணங்கியதாக மலைபடுகடாம் என்னும் நூலில் வரலாற்றுச் சான்று உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள். அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம். பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி வீ தீராத நோயும் தீர்க்கும். இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக்காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம். சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம். சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் உண்டு.

நம்பிக்கைகள்

தொழில் மந்தம், திருமணத்தடை போன்ற தடைகள் உள்ளவர்கள் இம்மலைக்கு 5 அல்லது 7 அல்லது 9 முறை என விஜயம் செய்து தீபம் போட்டு வணங்கினால் தீரும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சிறப்பு அம்சங்கள்

26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக்காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி, ஆடி 18, ஆடிப்பூரம் பாலாபிஷேகம், புரட்டாசி முதல் நாள், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி முதல் நாள், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் முதலிய நாட்களில் விழாக்கள் உண்டு.

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பர்வதமலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top