Thursday Sep 19, 2024

திருப்பூர் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயில்

முகவரி :

ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயில்,

திருப்பூர் மாவட்டம்,

தமிழ்நாடு- 641602

தொலைபேசி: +91- 0421 – 247 2200, 2484141.

இறைவி:

கோட்டை மாரியம்மன்

அறிமுகம்:

 ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அம்மா முழு உலகத்தின் தாயாக கருதப்படுகிறார். இக்கோயிலில் உள்ள மாரியம்மன் தனி சன்னதியில் சுயம்புவாக இருக்கிறார். கூடுதலாக இரண்டில் சுயம்பு அம்பாள் பிரதான சுயம்பு மாரியம்மனுக்கு இடப்பக்கமும் வலதுபுறமும் வைக்கப்படுகிறார். இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

       முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார். பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர், தனது உபயோகத்திற்கு போக, மீதி பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார். ஒருசமயம், அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை. சந்தேகமடைந்த விவசாயி பசுவிடமிருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை கண் காணித்தார். அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு, ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது. இதனைக் கண்டு வியப்படைந்த பக்தர், அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஜோதி தெரிந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், பசு பால் சொரிந்த இடத்தில் தான் எழுந்தருளியிருப்பதாக கூறினாள். மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர். அங்கே ஒரு அம்பாள் சிலை இருந்தது. அந்த சுயம்புவுக்கு (தானாகத் தோன்றியது) கோயில் கட்டினர்.

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயி ஒருவர், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டவராக இருந்தார். பசு வளர்க்கும் தொழில் செய்து வந்த அவர், தனது உபயோகத்திற்கு போக, மீதி பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார். ஒருசமயம், அவர் வளர்த்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து பால் கறக்கவில்லை. சந்தேகமடைந்த விவசாயி பசுவிடமிருந்து யாரோ பாலை திருடுவதாக எண்ணி அதனை கண் காணித்தார். அப்போது பசுக்கூட்டத்தில் இருந்து தனியே சென்ற அப்பசு, ஓரிடத்தில் தானாக பால் சுரந்தது. இதனைக் கண்டு வியப்படைந்த பக்தர், அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஜோதி தெரிந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், பசு பால் சொரிந்த இடத்தில் தான் எழுந்தருளியிருப்பதாக கூறினாள். மறுநாள் அவர் நடந்ததை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் இணைந்து ஜோதி தோன்றிய இடத்தை ஆய்வு செய்தனர். அங்கே ஒரு அம்பாள் சிலை இருந்தது. அந்த சுயம்புவுக்கு (தானாகத் தோன்றியது) கோயில் கட்டினர்.

நம்பிக்கைகள்:

தங்கள் வீட்டில் விசேஷங்கள் நடத்தும் முன்பும், புதிய தொழில் துவங்கும் போதும் இங்குள்ள அம்மன் முன்பு பூ போட்டு உத்தரவு கேட்ட பின்பே அச்செயல்களை துவங்குகின்றனர். தம்பதியர் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களின் இல்வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. அம்மை நோய் கண்டவர்கள், இத்தலத்தில் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

இக்கோயிலில் உள்ள மாரியம்மன் தனி சன்னதியில் சுயம்புவாக இருக்கிறார். கூடுதலாக இரண்டில் சுயம்பு அம்பாள் பிரதான சுயம்பு மாரியம்மனுக்கு இடப்பக்கமும் வலதுபுறமும் வைக்கப்படுகிறார். இதனால் கோயிலில் அருள்பாலிக்கிறார். கோயிலின் பிரகாரத்தில் காசி விநாயகர், பாலமுருகன், நாகர், கருப்பராயர், கன்னிமார் சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்:

நவராத்திரி, சித்ராபவுர்ணமி, வைகாசியில் வசந்த உற்சவம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, ஆடிவெள்ளி.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top