Sunday Jul 07, 2024

ஈசான லிங்கேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி

ஈசான லிங்கேஸ்வரர் சிவன்கோயில், திருச்சேரி – வலங்கைமான் சாலை, பந்தி, நாகரசம்பேட்டை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612605.

இறைவன்

இறைவன்: ஈசான லிங்கேஸ்வரர்

அறிமுகம்

திருச்சேறையின் மேற்கில் ஒரு கி.மீ. சென்றால் பந்தி கிராமம். இங்கே பெரிய கோயில் என்று எதுவும் காணப்படவில்லை. சிறிய தெரு ஒன்றில் தகரகொட்டகை கோயில் ஒன்றில் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். எதிரில் நந்தி ஒன்றுள்ளது. இங்கே இறைவனின் பெயர் ஈசான லிங்கேஸ்வரர் . 21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக இருக்கிறாள். சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால் பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார். திரிசூலம், பிரம்பு,கபால பாத்திரம், கத்தி,வாள்,சீலைப்பிள்ளை, கிலுக்கு, உடுக்கை, மண்டையோடு, சாட்டை என சிவனது ஆயுதங்களை கொண்டவள். பார்வதி இப்படி பந்தி தெய்வமாக வீற்றிருக்கும் இடம் இந்த பந்தி கிராமம் என கூறப்படுகிறது. இந்துகதிர்ச் சேர் அருணப் பந்தி, நடுத் தூண் ஒளிபட்டு, இன்ப ரசப் பால்அமுதச் …… சுவைமேவும், -என அருணகிரிநாதர் பாடியருள்கிறார். இதில் உள்ள அருணப் பந்தி என்பதற்கு நெருப்புருவாக திரண்ட இறைவன் என குறிக்கிறார். அதன்படி பந்தியும் அவனே என தெளியலாம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பந்தி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top