ஆதமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
![](https://lightuptemples.com/wp-content/uploads/2023/01/316189834_8324660467606990_4951643653110693543_n.jpg)
முகவரி :
ஆதமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர் சிவன்கோயில்,
ஆதமங்கலம், திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207.
இறைவன்:
ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
ஆதித்தன் எனும் சூரியன் வழிபட்டதால் ஆதித்தன்மங்கலம் எனப்பட்டது, இதுவே ஆதமங்கலம் என மருவியது. சிவபெருமான் அருளால் தோன்றிய பன்னிரண்டு துவாதச ஆதித்தியர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக் கொண்டனர். பிரமன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி ஆணையிட்டார். இவ்வூர் கிவளூரின் தெற்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள விடங்கலூரின் மேற்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது. ஆதமங்கலம் சித்தாறு எனும் சிறிய ஆற்றின் கரையிலேயே உள்ளது. இங்கு சாலையோரத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில் உள்ளது, கோயிலின் எதிரில் ஒரு அழகிய குளமும் அருகில் பள்ளி கட்டிடம் ஒன்றும் உள்ளது.
கோயில் கருவறை முகப்பு மண்டபம் இவை அதிட்டானம் வரை கருங்கல் கொண்டும் அதற்க்கு மேல் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள இறைவன் பெயர் ஆபத்சகாயேஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி. கிழக்கு நோக்கிய கருவறை இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். முகப்பில் இரு சன்னதிகளையும் இணைக்கும் மண்டபம் உள்ளது. இதில் இறைவனை நோக்கி நந்தி ஒன்றும் பலிபீடம் ஒன்றும் உள்ளது.
முக மண்டபத்தினை தாண்டி வெளியில் ஆத்ம நந்தி எனும் நந்தி இறைவனை நோக்கியுள்ளது. முகமண்டபத்தில் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். இதே மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சண்டேசர் மற்றும் ஒரு பெரிய பைரவர், பெரியதாக ஒரு சூரியன் சிலை உள்ளன. இந்த சூரியனே ஆதித்தனாக இருக்கலாம். கருவறை சுற்றில் தென்முகன், மட்டுமே உள்ளார். சண்டேசர் சன்னதி உள்ளது. பிரகார சிற்றாலயங்கள் என விநாயகர் மட்டும் உள்ளார் அவர் சத்தரத்து விநாயகர் என பெயர்கொண்டுள்ளார். எளிமையான கிராமக்கோயில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ஆளக்கூடிய சூரியன், சிறப்பாக இல்லாவிட்டால் பூர்வீக சொத்து பிரச்னை, வில்லங்கங்கள் ஏற்படும், இப்படி உள்ளவர்கள் சூரியன் வழிபட்ட இத்தலம் வந்து வழிபடலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/315642206_8324661747606862_1363174741002038990_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316189834_8324660467606990_4951643653110693543_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316253766_8324659557607081_5823444737149335641_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316269381_8324662344273469_1855054180691699430_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316308691_8324661187606918_4631058170754286515_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316420999_8324659837607053_3273107418293623605_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316557509_8324659497607087_4681557394519464294_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316680448_8324662587606778_734303965129345920_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316689363_8324660280940342_2558340925521889499_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316829172_8324661237606913_4467726577716452471_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316959408_8324661040940266_2512177123106248132_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/01/316960105_8324659987607038_7543792412224459315_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆதமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர், நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி