Saturday Jul 27, 2024

அருள்மிகு ரத்னாவளி (ஆனந்தமயீ) சக்தி பீடத் திருக்கோவில், மேற்கு வங்காளம்

முகவரி

அருள்மிகு ரத்னாவளி (ஆனந்தமயீ) சக்தி பீடத்திருக்கோவில் சிவன் கோயில், காந்தேஸ்வர் அருகில், கிருஷ்ணா நகர், கனக்குல், ஹூக்ளி மாவட்டம், மேற்கு வங்காளம்

இறைவன்

சக்தி: குமாரி பைரவர்: சிவ பைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது தோள்

அறிமுகம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் கனக்குல் அருகே கிருஷ்ணாநகர் என்ற இடத்தில் ரத்நகர் ஆற்றின் கரையில் ஆனந்தமயீ சக்தி பீடக்கோவில் அமைந்துள்ளது. இங்கே சதி தேவியை ‘குமாரி’ என்றும், சிவபெருமானை ‘பைரவர்’ என்றும் வணங்குகிறார்கள்.இது உள்நாட்டில் ஆனந்தமயீ சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. விஷ்ணு, சதியை இழந்த துக்கத்திலிருந்து சிவனை விடுவிப்பதற்காக, தனது ‘சுதர்சன் சக்கரத்தை’ பயன்படுத்தி சதி உடலைத் தூண்டாக்கினார். இந்தத் தலத்தில்தான், தேவியின் வலது தோள்ப்பகுதி விழுந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

புராண முக்கியத்துவம்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் வலது தோள்ப்பகுதி இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

துர்கா பூஜை, நவராத்திரி, இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஹவுரா

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஹவுரா

அருகிலுள்ள விமான நிலையம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top