Saturday Jul 27, 2024

அருள்மிகு பிரம்மாரி சக்தி பீடத் திருக்கோவில், திரிஸ்ரோதா

முகவரி

அருள்மிகு பிரம்மாரி தேவி சக்தி பீடத்திருக்கோவில் திரிஸ்ரோதா, போடாகன்ஜ், ஜல்பாய்குரி மாவட்டம், மேற்கு வங்காளம் – 735 218

இறைவன்

சக்தி: பிரம்மாரி பைரவர்: அம்பரா, உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது கால்

அறிமுகம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் போடாகன்ஜ் குக்கிராமத்தில் திஸ்தா அல்லது திரிஸ்ரோதா ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. இங்கே, 12 இதழ்கள் கொண்ட சக்தியாக பிரம்மாரி தேவி, பக்தர்களை அனைத்து நோய்களிலிருந்தும் பாதுகாக்க வருகிறார். இங்கே சதி தேவியை ‘பிரம்மாரி’ என்றும், பைரவரை ‘அம்பரா’ என்றும் வணங்குகிறார்கள். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. விஷ்ணு, சதியை இழந்த துக்கத்திலிருந்து சிவனை விடுவிப்பதற்காக, தனது ‘சுதர்சன் சக்கரத்தை’ பயன்படுத்தி சதி உடலைத் தூண்டாக்கினார். இந்தத் தலத்தில்தான், தேவியின் இடது கால் பகுதி விழுந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

புராண முக்கியத்துவம்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் இடது கால் பகுதி இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

கும்பம், நவராத்திரி, இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிலிகுரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதிய ஜல்பைகுரி

அருகிலுள்ள விமான நிலையம்

பாக்டோக்ரா

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top