Saturday Jul 27, 2024

அஞ்சூர் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அஞ்சூர் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில், அஞ்சூர், , செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 002.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் இறைவி: ஸ்ரீ மரகதவல்லி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த அஞ்சூர் கிராமம். மூலவர் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். தனி சன்னதியில் ஸ்ரீ மரகதவல்லி தாயார். உற்சவர் ஸ்ரீதேவி , பூதேவி சமேத கரியமாணிக்க பெருமாள். மற்ற சன்னதிகள் உடையவர், தேசிகர், மணவாள மாமுனிகள், நம்மாழ்வார், ராதா ருக்மணி கிருஷ்ணர், ஆண்டாள் ஆகியவை. கோயிலுக்கு அருகில் உள்ள மக்கள் எப்பொழுதாவது வருகிறார்கள். கோயில் சுவர்கள் பல நாட்களாக வண்ணம் பூசாமலும், மழையின் காரணமாக கருப்பு நிறமாக காட்சியளிக்கிறது. ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. இங்கு வர செங்கல்பட்டு, மற்றும் தாம்பரதிலிருந்து பேருந்துகள் உள்ளன. சிங்க பெருமாள் கோயில் 5 கிமீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு திரு வேணுகோபால்-9976870635.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அஞ்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தாம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top