திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
திருவிடைக்கழி அஞ்சல், தரங்கம்பாடி தாலுகா,
பொறையார், நாகப்பட்டினம் – 609310
தொலைபேசி: +91 4364 204888 / 204444
இறைவன்:
பாலசுப்ரமணிய சுவாமி
அறிமுகம்:
பாவ விமோசனப் பெருமான் கோயில் மற்றும் பால சுப்ரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூர் அருகே உள்ள திருவிடைக்கழியில் அமைந்துள்ளது. சிவபெருமான் மற்றும் முருகன் இருவரும் ஒரே கர்ப்பகிரகத்தில் உள்ளனர். திருவிடைக்கழி அல்லது திருக்குறவாடி திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் ராகு கேது மற்றும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். திருவிசைப்பா சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. திருப்புகழில் அருணகிரிநாதரும், திருவிசைப்பாவில் செந்தனாரும் இக்கோயிலின் ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் சிவனைப் போற்றிப் பாடல்களைப் பாடியுள்ளனர். சேந்தனார் சுவாமிகள் இத்தலத்தில் முக்தி அடைந்தார்.
திருவிடைக்கழி என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். திருவிடைக்கழி, மாயூரம் மற்றும் தரங்கம்பாடி செல்லும் வழியில், அருகிலுள்ள ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் மயிலாடுதுறையிலும், அருகிலுள்ள விமான நிலையம் திருச்சியிலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
முருகன் சூரபத்மனை வதம் செய்த பிறகு, அவனது மகன் இரண்யாசுரன் சுறாமீன் வடிவெடுத்து தரங்கம்பாடி கடலில் ஒளிந்தான். சிவபக்தனான அவனை, அன்னை பராசக்தியின் அருள் பெற்று முருகன் கொன்றான். அசுரனாக இருந்தாலும் சிவபக்தன் என்பதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க பராசக்தியின் ஆலோசனைப்படி, முருகன் இத்தலத்திலுள்ள குராமரத்தின் அடியில் சிவனை நோக்கி தவமிருந்து பலனடைந்தார். குராமர நிழலில் அமர்ந்து சிவனை வழிபட்டதால் ‘திருக்குராவடி’ என இத்தலத்திற்கு பெயர் வந்தது. தரிசிப்போரின் பழி, பாவம் போக்கும் இத்தலமுருகனை, ‘திருக்குராத்துடையார்’ என கல்வெட்டுகள் கூறுகின்றன.
நம்பிக்கைகள்:
தீராத பழி நீங்க, மனத்தெளிவு பெற, சிறந்த அறிவு பெற,திருமணத்தடை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
சிவனுடன் முருகன்: கருவறையின் உட்புறத்தில் ஒரு சிவலிங்கமும், முருகனுக்கு முன்புறம் ஒரு ஸ்படிக லிங்கமும் உள்ளது. முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவவிமோசன சுவாமியாக அருள்கிறார். திருச்செந்துாருக்கு நிகரான இவரை தரிசிக்க தீராப்பழியும் தீரும். தலவிருட்சமான குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்.
நிச்சயதார்த்த தலம்: முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை தவம் செய்த தலம் இது. இவரை வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் திருமணத்தடை அகலும். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், சிவனருளால் முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் ‘விடைகழி’ எனப்படுகிறது.
ஏழுநிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. ஆறடி உயரத்தில் முருகன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். சுவாமியின் வலதுகை அபயம் தரும் விதத்திலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் உள்ளன.
திருவிழாக்கள்:
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசத்தின் போது, சுவாமிமலையிலிருந்து நடைபயணமாக வருவது பெரிய திருவிழாவாக நடக்கிறது.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவிடைக்கழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி