Thursday Sep 19, 2024

குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி :

அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில்,

காஞ்சிபுரம் – 631 502,

காஞ்சிபுரம் மாவட்டம்.

போன்: +91- 44 – 2722 2049

இறைவன்:

சுப்பிரமணிய சுவாமி

இறைவி:

வள்ளி, தெய்வானை

அறிமுகம்:

 குமரகோட்டம் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, போர் கடவுள் மற்றும் சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதியின் மகன். இக்கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1915 ஆம் ஆண்டு புராதன கோவில் அதன் தற்போதைய வடிவத்தில் மீண்டும் கட்டப்பட்டது. இந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது, இது இந்தியாவின் ஏழு “மோக்ஷ-புரிஸ்” அல்லது இரட்சிப்பு பெறக்கூடிய புனித நகரங்களில் ஒன்றாகும்.

பஸ் ஸ்டாண்டிற்கு வடமேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மேற்கு ராஜா தெருவில் வடக்கு முனையில் சங்கர மடம் மற்றும் தெற்கு முனையில் கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும், திருவிழாக் காலங்களில் ஊர்வலமாக வெளியில் வரும்போது, ​​குமரகோட்டம் கோயிலுக்கு முன்பாகவே கடந்து செல்வது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமானைப் போற்றி ‘திருப்புகழ’ எழுதிய அருணகிரிநாதர், இக்கோயிலில் உள்ள முருகப்பெருமானைப் புகழ்ந்து ‘அறிவிளப்பித்தர்’ என்ற திருப்புகழ்ப் பாடலை இயற்றியுள்ளார்.

புராண முக்கியத்துவம் :

       “ஓம்’ என்னும் பிரணவத்தின் பொருளறியாத பிரம்மனை முருகன் சிறையிலடைத்தார். அதன் பின், பிரம்மனின் ருத்ராட்ச மாலை, கமண்டலத்தை பெற்று பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். அவ்வாறு படைப்பை இத்தலத்தில் நடத்தியதாக நம்பிக்கை. மேற்கு நோக்கியுள்ள இந்த முருகனை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவனை தரிசித்த பலன் கிடைக்கும். எனவே இவரை “ஒருவரில் மூவர்’ என விசேஷ பெயரிட்டு அழைப்பர்.

நம்பிக்கைகள்:

நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்:

நாகம் குடைபிடிக்கும் முருகன்: நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. இந்த வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவிக்கிடக்கிறது. பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. இவரை குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் என அழைக்கிறார்கள். முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முக்கியமானதும், புராண, சரித்திரப் பெருமைகள் நிறைந்ததும், கோயில் நகரமானதுமான காஞ்சியில் அமைந்தது தான் குமரக்கோட்டம். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேறியது. குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. காஞ்சிக்கு செல்பவர்கள் காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்து விட்டு குமரக்கோட்டத்து குமரனையும் தரிசித்தால்தான் முழுப்பலன் கிடைக்கும்.

புராணங்களுள் மிகவும் புகழுடையது கந்த புராணம். இந்த புராணம் குமரக்கோட்டத்தில் எழுந்ததே. இத்தல முருகனே, “திகட சக்கரம்’ என அடியெடுத்துக் கொடுத்து தனக்கு பூஜை செய்யும் கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு “கந்தபுராணம்’ எழுதுமாறு செய்தான். கந்தபுராணம் அரங்கேறிய போது ஏற்பட்ட ஐயத்தையும், இத்தல முருகனே புலவர் வடிவத்தில் வந்து தீர்த்து வைத்தான். கி.பி. 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. இத்தலத்திற்கு அருணகிரி நாதரின் திருப்புகழும் பெருமை சேர்க்கிறது. பாம்பன் சுவாமிகள் குமரக்கோட்டத்திற்கு வழி தெரியாமல் செல்ல, முருகனே சிறுவன் வடிவில் வந்து வழிகாட்டி அழைத்து வந்து தரிசனம் கொடுத்த தலம்.

திருவிழாக்கள்:

கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோயிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள். வைகாசி விசாகப் பெருவிழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு. இது தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி முதலியன இங்கு சிறப்பான நாட்களாகும்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top