Thursday Sep 19, 2024

வேண்டும் வரம் உடனடியாக அருளும் அபூர்வ ஆஞ்சநேயர்

திட்டை செல்லும் வழியில் – பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. ஊருக்கு செல்லும்போது யாரிடமாவது வழி கேட்டால் ,  ஆஞ்சநேயர் கோவிலுக்கா , இல்லை சிவன் கோவிலுக்கா என்று கூட கேட்கின்றனர். திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ளது நவநீத கிருஷ்ணன் ஆலயம் . இங்கு தான் இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா… கோவிலில் நுழையும்போதே , ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல […]

Share....

தலைகீழாக நிழல்விழும் ஈசன் கோவில் கோபுரம்

ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது இந்த கோயில். பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது. விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது.  ஒரு நிழல் […]

Share....

சித்தர்கள் சிவன் ஆலயம்!

சேலம் அருகே அரூர் மெயின் ரோட்டில் சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உதயதேவர் மலை உள்ளது. இந்த மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். இந்த மலை சிறிய குன்று போல் அமைந்திருக்கும். இதன் மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. திருமணிமுத்தாறு ஆறாக பாயத்தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள முதல் சிவாலயம் என்ற சிறப்புக்குரியது இந்த ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை […]

Share....

ஜகந்நாத் பூரி தாம்  உலகத்தின் இறைவன்

அயோத்தி, காசி மற்றும் உஜ்ஜைனியுடன் இந்தியாவின் புனித நகரங்களில் ஜகன்னாத் புரியும் ஒன்றாகும். இது ஜெகன்னாதர், சுபத்ரா மற்றும் புலபத்ரா ஆகியோரின் நீதிமன்றம். வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்த இடம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். நகரத்தில், கடல் அலைகளுடன் கூடிய அழகிய காட்சிகளைக் கொண்ட பல கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. முடிவில், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவை நீங்கள் அங்கு பெறுவீர்கள். […]

Share....

பூரி ஜெகநாதர் ஆலயம் மகாபாரத காலத்துடன் தொடர்புடையது

பாரத திருநாட்டின் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட அடையாளங்களில் முக்கியமானது ஒரிசாவின் பூரி ஜெகநாதர் ஆலயம் அந்த பூரி ஜெகநாதர் ஆலயம் மகாபாரத காலத்துடன் தொடர்புடையது, ஒரிசா பகுதி மக்கள் வாழ்வில் மட்டுமல இந்திய மக்களின் வாழ்விலும் ஒன்றிணைந்தது காசி போல, ராமேஸ்வரம் போல அது அகில இந்திய அடையாள ஷேத்திரம். தமிழருக்கு மதுரை பழனி போல அப்பகுதி மக்களுக்கு அது அவ்வளவு முக்கியமானது, 2004 சுனாமி அல்ல அதற்கு முந்தைய பல நூற்றாண்டுக்கு முற்பட்ட சுனாமியில் கூட […]

Share....

வெள்ளை விநாயகர்!

கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது. இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி […]

Share....

146 ஆண்டுகளுக்கு பிறகு நார்த்தாமலை பாறையில் 30 அடி ஆழ சுனை நீருக்குள் இருந்து வெளிப்பட்ட அதிசய ஜுரஹரேஸ்வரர் லிங்கம்!

சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற சித்தன்ன வாசல் கோயில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை உட்பட பல மலைகள் உள்ளன. பல கோயில்கள் இருக்கும் மலை தான் “நார்த்தாமலை”. இந்த நார்த்தாமலையில் சுனைலிங்கம் உள்ளிட்ட  பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன.  இந்த பகுதி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி., 7 – 9ம் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இங்கிருக்கும் மேல மலையில் மிகப்பழமையான விஜயாலீஸ்வரர் கோயில் மற்றும் அதனை சார்ந்த […]

Share....

கோவிலில் செய்யும் வழிபாடு….

1.கை கால்களை கழுவுதல்:- கோவிலிற்குள் நுழைவதற்கு முன் நமது கை கால்களை நீரால் கழுவிவிட்டு உள்ளே செல்லுதல் வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் போது கிருமிகளை ஆலயத்துக்கு வெளியிலேயே அக அசுத்தங்களை கலைந்துவிட்டு செல்கிறோம். 2.கோபுர வழிபாடு:- ஆண்களாக இருந்தால் கோவில் கோபுரத்தை நோக்கி இரு கைகளை மேலே தூக்கி வணங்குதல் வேண்டும். அவ்வாறு செய்வதனால் கோவில் கோபுர கலசத்தில் உள்ள தங்கம் வெள்ளி, பித்தலை ஆகிய உலோகங்களோடு சேர்ந்த நவ தானியங்கள் மூலம் பரப்பப்படும் மின் […]

Share....

நவகிரகங்களும் அடங்கியதுதான் திருப்பதி தரிசனம் திருப்பம் ஏற்படுவதும் இதனால்தான்!

திருப்பதிக்கு சென்று பாலாஜியை வணங்கி வந்தால் திருப்பம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. அது எப்படி என பலருக்கு கேள்வி எழுந்திக்கும்… #நவகிரகங்களின் வழிபாட்டுடன் கூடியதே திருப்பதி தரிசனம் என்பதை விரிவாக பார்ப்போம்… திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என முன்னோர்கள் சொல்வதுண்டு. அது எப்படி திருப்பதி எம்பெருமானை தரிசித்து வந்தால் நம் வாழ்க்கையில் திருப்பம் நிகழ்கிறது என பலரும் சிந்திப்பதுண்டு. திருப்பதி கோயில் என்பது நாம் பொதுவாக பெருமாள் கோயிலாக மட்டும் தெரியும். ஆனால் அது ஒரு […]

Share....

தொட்டாமல்லூர் நாடி நரசிம்மர்

கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்று புகழ் பெற்ற நாடி நரசிம்மர் ஆலயம். பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள   தொட்டாமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். தேசிய நெடுஞ்சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது  இடது பக்கம் அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். அதன் எதிரில்  சாலையைத் தாண்டி எதிர்புறத்தில் உள்ள சாலையில் சென்றால்  சிறு ரயில் பாதையைக் கடந்து செல்ல வேண்டி வரும். […]

Share....
Back to Top