Thursday Sep 19, 2024

அளுந்தூர் வரகுணேஸ்வரர் ஆலயம்

அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம் அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை […]

Share....

குற்றம் புரிந்தவரை திருந்தச் செய்யும் திருக்கோளபுரீசர் கோவில்

தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம்.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், தென் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தரும், சமணர்களை வென்று சைவ சமயப் பேரெழுச்சியை உண்டாக்கினார்கள். அந்த எழுச்சியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் ஆகும். திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி […]

Share....

தர்ப்பணத்தின் தமிழ் அர்த்தம்

அமாவாசை தர்ப்பனத்தின் தமிழ் அர்த்தம்.அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.ஸ்தல சுத்தி: – தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும்.அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை.ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் […]

Share....

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில்

வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு. காயத்துடன் சிவலிங்கம் […]

Share....

கடன் தொல்லை நீக்கும் வைத்தியநாத சுவாமி திருக்கோவில்

அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது.இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையாரும், வலதுபுறம் துர்க்கை திருமேனிகளும் உள்ளன. அடுத்து மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் காணப்படுகின்றன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன், வைத்தியநாத சுவாமி […]

Share....

ஞானம் அளிக்கும் ஞானபதீஸ்வரர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் பனையூர் பகுதியில் அமைந்துள்ளது ஞானபதீஸ்வரர் ஆலயம்.. பனையூர் ஆதி காலத்தில் ‘பனையூர் குளமங்கலம்’ என்றும், ‘பனசை நகர்’ என்றும், ‘தென்பனசை நகர்’ என்றும், ‘பனையூர் பிராந்தக சருப்பேதிமங்கலம்’ என்றும் பல பெயர்களைக் கொண்டு விளங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஊர் மேலப் பனையூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரின் வடகிழக்கில் சிவன் கோவிலும், அதன் எதிரில் ஊரணியும் அமைந்துள்ளது. இது பழங்காலத்திலேயே இவ்வூர் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற கிராமம் என்பதைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. பனையூரைச் சுற்றியுள்ள […]

Share....

நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில் – பேராவூரணி

நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. ‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள். நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் […]

Share....

ஸ்ரீ சக்லேஷ்வர் தரிசனம்!

மானச கங்கா,பஞ்சலிங்கத் தொகுதியான ஸ்ரீ சக்லேஸ்வர் மகாதேவ் மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் கோவர்த்தனகிரி உள்ளது.அதன் அடிவாரத்தில் மானச கங்கை என்னும் பொய்கை உள்ளது. மானச கங்கையின் வடக்குக் கரையில், சக்கரத் தீர்த்தக் கரையில், ஐந்து சிவலிங்கங்களின் குழு ஸ்ரீ சக்லேஸ்வர மகாதேவ் என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. இந்த ஐந்து சிவலிங்கங்களும் சிவப்பரம்பொருளின். ஐந்து திருமுகங்களாகக் கருதப்படுகின்றன.அவை கோவர்த்தகிரியினைப் பாதுகாக்கின்றன. ( இங்கு,நாம் சிவப்பரம்பொருளின் சதாசிவ மூர்த்தம் பற்றி சிறிது காண்போம். சிவப்பேறு அருளும் […]

Share....

ஒரே சாபத்தால் 300 ஆண்டுகளாக சாய்ந்திருக்கும் சிவன் கோவில்.. அப்படி என்ன சாபம் அது..?

இந்தியாவில் உள்ள வாரணாசி நகரத்திற்கு  ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கா நதியையும் அதன் கரையில் உள்ள கோவில்களையும் தரிசிக்க வருகிறார்கள். ஆனால் ரத்னேஷ்வர் என்ற  கோயில் மற்ற எல்லா கோவில்களை  வேறுபட்டு நிற்கிறது. உலக புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தை பற்றி கேட்டிருப்போம். அது சுமார் 4 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. ஆனால் வாரணாசியில் உள்ள இந்த கோவில் சுமார் 9  சரிந்துள்ளது. மேலும் இது ஆண்டுதோறும் மேலும் சாய்ந்து வருவதாக கூறுகின்றனர். இப்படி இந்த கோவில் […]

Share....
Back to Top