Thursday Sep 19, 2024

திண்டல் முருகன் கோவில்

ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில்.  அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. திண்டல் மலை மீது தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இங்கு தீபத்திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும் வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஆகையால் […]

Share....

உலகின் உயரமான சிலைகள்

உலகின் உயரமான சிலை எது என்று தெரிந்து கொள்வோம். சிலை அமைப்பதற்கான காரணம் ஒருவர் செய்த செயலை நினைத்துத் அவரை போற்றும் விதமாக அமைக்கபடுகிறது, அந்த விதத்தில் பார்த்ர்த்தால் நம் நாட்டிட் ற்கு பல சேவைகளை செய்த சிலைகள் உள்ளது. ஒவ்வொரு சிலையுமே அவர்கர் ள் செய்த நலனை போற்றுவதற்காக அமைக்கப்படும். அப்படி அமைக்கபடும் சிலைகள் வெவ்வேறான உயரத்தை கொண்டிருக்கும், அந்த வகையில் இந்த தொகுப்பில் உலகின் உயரமான சிலை எது என்று தெரிந்து கொள்வோம், உயரமான […]

Share....

புலவநல்லூர் கங்காதீஸ்வரர் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், குடவாசல்  வட்டம்,  புலவநல்லூர் கங்காதீஸ்வரர் திருக்கோயில் திருவாரூரிலிருந்து 10 கி.மீ. நன்னிலத்திலிருந்தும் 10 கி.மீ.  குடவாசலிலிருந்து 10 கி.மீதூரத்தில் உள்ளது. முன்னர் பெருவேளூர் எனவும், பின்னர் காட்டூர் அய்யம்பேட்டை எனவும், தற்போது மணக்கால் அய்யம்பேட்டை எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி புலவநல்லூர் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில்முற்காலத்தில்18 சிவாலயங்கள், 18 தீர்த்தங்கள், 18 திருவீதிகள்இருந்தன. தற்போது கங்காதீஸ்வரர்  கோயிலை சேர்த்து நான்கு மட்டுமே எஞ்சியுள்ளன. உ.வே.சா 1930களில் இப்பகுதி வந்தபோது இங்கு பதினோரு கோயில்கள் இருந்தன என […]

Share....

“என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு?” திரும்பி நின்ற கண்ணன்!

ஜகத்குரு ஆதிசங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. ஹிந்துக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை வளர்த்து, ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டு, வேத நெறிகளிலிருந்து விலகி புதுப் புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம். எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. ஆன்மீகத்துக்கும் ஹிந்து தர்மத்துக்கும் புத்துயிரூட்டும் பொருட்டு சங்கரர் பாரதத்தில் உள்ள எல்லாத் தலங்களுக்கும் கால் நடையாகவே நடந்து சென்றார். அப்படி ஒரு சமயம் வடக்கில் உள்ள கோவில்களை தரிசனம் செய்துவிட்டு […]

Share....

ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்யலாமா கூடாதா?

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையன்று மாலை சூர்ய க்ரஹணம்.  ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்யலாமா கூடாதா என்று பலருக்கு வெவ்வேறு கருத்துக்கள் உலவி வருகிறது. அதற்கான விளக்கத்தை பார்க்கலாம் தர்ப்பணங்களை நித்ய தர்ப்பணம் நைமித்திக தர்ப்பணம், காம்ய தர்ப்பணம் என்று தர்ப்பனங்களை மூன்று விதமாக பிரித்திற்கிறார்கள். அமாவாசை நித்ய தர்ப்பண வகையை சார்ந்தது. ..!! மாத பிறப்பு நைமித்திக தர்ப்பண வகையை சார்ந்தது…!! கிரஹண தர்ப்பணம் காம்ய தர்ப்பண வகையை சார்ந்தது…!! ஒரு நாளில் இரு தர்ப்பணங்கள் […]

Share....

தினமும் நிறம் மாறும் சிவலிங்கம்!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் என்ற இடத்தில் அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள ஒரு லிங்கம் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலை குடையாக இருக்க அதன் கீழ் அமைந்த இந்த சிவலிங்கம், ஒரு நாளில் மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு மாறுகிறது. இந்த அதிசய நிகழ்வு, வருடத்தில் அனைத்து நாட்களும் நடைபெறுவதுதான் கூடுதல் சிறப்பு. காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் […]

Share....

அகத்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம்!

அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.    நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை. முருகப் பெருமானின் இடப்புறத்தில் விநாயகரும், வலப்புறத்தில் […]

Share....

அரியலூர் ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுகளுக்கு பின் மீட்பு..

திருச்சி: அரியலுார் அருகே, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்துதிருடப்பட்ட ஆசநேயர் சிலை, 11 ஆண்டுகளுக்கு பின், ஆதிரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே, பொட்டவெளிவெள்ளூர் கிராமத்தில், வரதரா ஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதே வி மற்றும் ஆசநேயர் உலோக சி லைகள் திருட்டுப் போனதாக, 2012ல் செந்துறை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் இந்த வழக்கை விசாரித்த, சிலை கடத்தல் தடுப்பு […]

Share....

சோழ நாட்டின் பஞ்ச ஆரண்ய தலங்கள்!!!

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே  அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால், 1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது. 2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) – காலை வழிபாட்டிற்குரியது. 3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) […]

Share....

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் திருமாலீஸ்வரர் !!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்துக்கு அருகில் திருமாதலம்பாக்கம் திருத்தலத்தில் உள்ளது ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சுயம்பு   திருமாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தினை திருமால்+தவம்+பாக்கம் என்று பிரித்து திருமால் இங்கு விரும்பி உறையும் தலம் என்றும் கூறுவர். திருமால் மிகுந்த விருப்பமுடன் ஈசனை வழிபட்டு, தமது மனக்கவலைகள் ஒழிந்து மனோபலம் பெற்ற தலம் என்றும் பொருள் சொல்வார்கள்.  இது மஹாலக்ஷ்மி மனம் உவந்து உறைந்துள்ள தலமாதலால் மங்கலம் நிறைந்த தலம் என்றும் கூறுவர். ஒவ்வொரு முறையும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் […]

Share....
Back to Top