Monday Sep 16, 2024

சாரதா பீடம்- ஜம்மு காஷ்மீர்

முகவரி

சாரதா பீடம்- சாரதா பஜார், சாரதா, ஜம்மு காஷ்மீர்

இறைவன்

இறைவி: சாரதா (சரசுவதி)

அறிமுகம்

சாரதா பீடம் , இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். காஷ்மீர் பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது. 14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.

புராண முக்கியத்துவம்

இந்தியத் துணைக்கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது. அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் வைணவ குருவுமான இராமானுசர், பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர். சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது. மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது. கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது. இஸ் லாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 – 1048), சாரதா பீடத்தின் கருவறையில் மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் சூரியன் கோயில் போன்று, சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார். பதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இஸ்லாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது. சாரதா பீடத்தை விளக்கும் சாரதியின் இரண்டு பிரபலமான புராணக்கதைகள் உள்ளன. உலகை ஆளும் சாரதா மற்றும் நாரதா என்ற இரண்டு சகோதரிகள் இருந்தனர். பள்ளத்தாக்கைக் காணும் இரண்டு மலைகள், சாரதி மற்றும் நாரதி, அவற்றின் பெயரிடப்பட்டது. ஒரு நாள், நாரதர், மலையிலுள்ள தன் இருப்பிடத்திலிருந்து, சாரதா இறந்துவிட்டதையும். ஆத்திரமடைந்த அவள், அவளுக்கு சமாதி கட்ட உத்தரவிட்டாள், அது சாரதா பீடமாக மாறியது. இரண்டாவது புராணக்கதை இளவரசியை நேசித்த ஒருவர். அவள் ஒரு அரண்மனையை விரும்பினாள், காலை அசான் (பிரார்த்தனை) நேரத்தில், அவர் முடித்திருக்க வேண்டும், ஆனால் கூரை முழுமையடையாமல் இருந்தது, அந்த காரணத்திற்காக, சாரதா பீத் இன்று கூரை இல்லாமல் உள்ளது.

காலம்

6 முதல் 12 ஆம் நூற்றாண்டுகள் CE

நிர்வகிக்கப்படுகிறது

இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சாரதா

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஸ்ரீநகர்

அருகிலுள்ள விமான நிலையம்

ஜம்மு

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top