Wednesday Sep 17, 2025

சர்வராஜன் பேட்டை சிவன்கோயில், கடலூர்

முகவரி

சர்வராஜன் பேட்டை சிவன்கோயில் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலை, சர்வராஜன் பேட்டை, கடலூர் மாவட்டம் – 608 803.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலையில் ஐந்தாவது கிமீ-ல் உள்ளது சர்வராஜன் பேட்டை, செராம்பேட்டை என பேருந்து நடத்துனர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஊர். வீராணம் ஏரியின் வடிகால் ஓடையான வெள்ளியங்கால் ஓடையின் கரையில் உள்ளது இந்த ஊர். இங்கு பல நூறு ஆண்டுகளின் முன்னம் ஒரு சிவன்கோயில் இருந்ததாகவும், காலப்போக்கில் சிதிலமடைந்து வயல் வெளியில் இருந்த லிங்கம், விநாயகர் சிலைகளை மர்மநபர் அங்கிருந்து வெள்ளியங்கால் ஓடைக்கரையில் போட்டுவிட்டதாக கூறுவர். அதன் பின்னர் இந்துக்கள் சிலர் அதற்கு ஒரு தகர கொட்டகை போட்டு அதற்கு தரையும் போட்டு வைத்து வழிபடுகின்றனர். காலசக்கரம் சுழலும்போது இந்த இறைவனும் கோயில் கொள்வார் என்று நம்புவோமாக……. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சர்வராஜன் பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

காட்டுமன்னார்கோயில்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
lightuptemple

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top