Thursday Sep 19, 2024

கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி திருக்கோயில் (குரு கோயில்), காஞ்சிபுரம்

முகவரி :

கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி திருக்கோயில் (குரு கோயில்),

கோவிந்தவாடி,

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு – 631 502

தொலைபேசி: +91- 44 – 3720 9615, 27294200

இறைவன்:

தட்சிணாமூர்த்தி

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அகரம் அருகே உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வியாழன் அல்லது பிருஹஸ்பதி கிரகத்திற்கு அதிபதி. வியாழன் கிரகம் வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுகிறது, மேலும் இது மக்களின் தலைவிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குருவான தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தில் வழிபடப்படும் இந்த தீய கிரகத்திற்கு எண்ணற்ற சன்னதிகள் உள்ளன. கோவிந்தவாடி, தட்சிணாமூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட குருஸ்தலம் கோயிலுக்கு உள்ளூரில் அறியப்படுகிறது. கோவிந்த ஸ்வாமி பெருமாள் தனது குடும்பத்தினருடன் தட்சிணாமூர்த்தியால் இந்த கோவிலில் வேதம் பயிற்றுவிக்கப்பட்டதாகவும், அதனால் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வியாழன் கிழமையும் விசேஷ நாளாகக் கருதப்படுவதால், அன்றைய தினம் பக்தர்கள் அதிக அளவில் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். குரு கிரகத்தின் செல்வாக்கால் ஏற்படும் பிரச்சினைகள் / தடைகளை சமாளிக்க குரு ப்ரீத்தி பூஜை செய்யலாம்.

தட்சிணாமூர்த்திக்கு மட்டும் தனித்தனி சன்னிதியும் இதுதான். பொதுவாக மற்ற சன்னதிகளில் இறைவன் கோபுரம் இல்லாத பிரதான/தெய்வத்தின் தெற்குப் பகுதியில் இருக்கிறார். இருப்பினும், கோவிந்தவாடி கோவிலில் முக்கிய கடவுள் தட்சிணாமூர்த்தியை சுற்றி மற்ற தெய்வங்களுடன் இருக்கிறார். இது தட்சிணாமூர்த்திக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகவும், குருவுக்கான நவகிரக க்ஷேத்திரமாகவும் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 ஒருசமயம் மகாவிஷ்ணு பக்தன் ஒருவனை காக்க போரிட்டபோது, அவரது சக்கரம் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துதீசி எனும் முனிவர் மீது பட்டு, முனை மழுங்கியது. தனது முதன்மையான ஆயுதமான சக்கரம் பயனில்லாமல் போனதால் மகாவிஷ்ணு ஆயுதம் இன்றி இருந்தார். எனவே, அச்சக்கரம் தனக்கு மீண்டும் கிடைக்க என்ன செய்வதென்று தேவர்களுடன் ஆலோசனை செய்தார். சிவனை வேண்டினால் சக்கரம் கிடைக்கும் என அறிந்து கொண்டார்.

சிவனை வணங்கி அருள்பெற “சிவதீட்சை’ பெற வேண்டும் என்பது நியதி. எனவே அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இத்தலம் வந்தார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனை எண்ணி தவம் செய்து வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து சிவதீட்சை செய்து வைத்து உபதேசம் செய்தார். மேலும், “”இத்தலத்திற்கு அருகில் உள்ள ஓர் தலத்தில் (திருமால்பூர்) லிங்க வடிவத்தில் இருக்கும் தன்னை ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜை செய்து வழிபட்டு வர உரிய காலத்தில் சக்ராயுதம் கிடைக்கப்பெறும்” என்றும் கூறினார். அதன்படி மகாவிஷ்ணு, அருகில் உள்ள திருமால்பூர் சென்று சிவனை வணங்கி தவம் செய்து சக்ராயுதம்பெற்றார்.மகாவிஷ்ணுவிற்கு குருவாக காட்சி தந்த சிவன், இத்தலத்தில்”தெட்சிணாமூர்த்தியாக’ அருளுகிறார்.

நம்பிக்கைகள்:

குருதோஷம் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். அம்பாளுக்கு சுமங்கலி பூஜை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை. இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் நிறைவேறியவர்கள் தெட்சிணாமூர்த்திக்கு “தேங்காய் தீபம்’ ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

       சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி தனிச்சன்னதியில் இல்லாமல் கோஷ்டத்தில்தான் (கருவறைச்சுவரில்) காட்சி தருவார். ஆனால் இங்கு தனிக்கருவறையில் மூலவராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு பின்புறத்தில் கைலாசநாதரும் தனியே உள்ள கருவறையில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். அதாவது ஒரே வி மானத்தின் கீழ் உள்ள இரண்டு கருவறைகளின் இருபுறமும் சிவனும், தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இது சிறப்பான அமைப்பாகும். இங்கு தட்சிணாமூர்த்தியே பிரதானமானவர் என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகத்தின் போதுகூட இவருக்கே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவனே, தட்சிணாமூர்த்தியாக இருந்து உபதேசம் செய்தார் என்பதால் இவர் நெற்றியில் மூன்றாம் கண், தலையில் பிறைச்சந்திரன் மற்றும் கங்காதேவியுடன் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தி இங்கு கூர்மம் (ஆமை), எட்டு யானைகள், பஞ்ச நாகங்கள், சிம்மம், அஷ்டதிக்பாலகர்கள் ஆகியோர் பஞ்ச ஆசனங்களாக இருக்க அதன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பெருமாளுக்கு தனித்து காட்சி தந்தவர் என்பதால் இவருக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் “கைலாயம்’ போன்ற அமைப்பில் மண்டபம் மட்டும் இருக்கிறது. இவரது காலுக்கு கீழே வலதுபுறம் திரும்பியபடி இருக்கும் முயலகன், இங்கு இடது பக்கம் திரும்பியபடி இருக்கிறான்.

விபூதிக்காவடி: சித்திரையில் நடக்கும் திருவிழாவின்போது வித்தியாசமாக தட்சிணாமூர்த்திக்கு “விபூதிக்காவடி’ எடுத்து வழிபடுகின்றனர். அந்த விபூதியையே சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக தருகின்றனர். இதனை நீரில் கரைத்துக் குடித்தால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை இருக்கிறது. “விபூதி’ சிவனது சின்னம் என்பதை உணர்த்தும் விதமாக இங்கு தட்சிணாமூர்த்திக்கு காவடி எடுப்பது புதுமையான வழிபாடாகும்.

சந்தன, குங்கும கோவிந்தன்: கோயில்களில் பெருமாளுக்கு திருமண்ணால் நாமம் போட்டுத்தான் அலங்காரம் செய்வர். ஆனால், இங்கு சந்தனம், குங்குமத்தையே நாமம் போல நெற்றியில் பூசி வழிபடுகின்றனர். சிவதீட்சை பெற்ற பெருமாள் என்பதால் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

இத்தலத்தில் தெட்சிணாமூர்த்திக்கு இடப்புறத்தில் சிவன், கைலாசநாதராக அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் பிரகார தெய்வமாக இருக்கிறார். ஆதிசங்கரர் சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். இவருக்கு அர்த்தமண்டபத்தில் தனிச்சன்னதி உள்ளது. பிரகாரத்தில் நாகதேவதை, ராகு, கேது ஆகியோர் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தாமாகவே பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.

திருவிழாக்கள்:

சித்திரையில் குருபகவான் பூஜை, குருப்பெயர்ச்சி, மகாசிவராத்திரி, மாசியில் சங்காபிஷேகம்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோவிந்தவாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top