Monday Sep 16, 2024

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதசிகள்:

1. உற்பத்தி (ஏகாதசி) – மார்கழி – க்ருஷ்ண (பக்‌ஷம்) – சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச – மார்கழி – சுக்ல – வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா – தை – க்ருஷ்ண – பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா – தை – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா – மாசி – க்ருஷ்ண – அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா – மாசி – சுக்ல – பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா – பங்குனி – க்ருஷ்ண – ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ – பங்குனி – சுக்ல – கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா – சித்திரை – க்ருஷ்ண – பாபங்கள் அகலும்

10. காமதா – சித்திரை – சுக்ல – நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் – வைகாசி – க்ருஷ்ண – ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி – வைகாசி – சுக்ல – பாவம் நீங்கும்

13. அபார – ஆனி – க்ருஷ்ண – குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) – ஆனி – சுக்ல – எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது – பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ – ஆடி – க்ருஷ்ண – நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ – ஆடி – சுக்ல – தெய்வ சிந்தனை அதிகமாகும் – திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா – ஆவணி – க்ருஷ்ண – விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா – ஆவணி – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா – புரட்டாசி – க்ருஷ்ண – இழந்ததைப் பெறலாம் – அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா – புரட்டாசி – சுக்ல – பஞ்சம் நீங்கும்

21. இந்திரா – ப்பசி – க்ருஷ்ண – பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா – ப்பசி – சுக்ல – கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா – கார்த்திகை – க்ருஷ்ண – உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் – கார்த்திகை – சுக்ல – பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 – கமலா – (சில வருடங்களில் மட்டும்) – மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top