Wednesday Aug 14, 2024

அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நெரும்பூர்

முகவரி

அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நெரும்பூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603 102.

இறைவன்

இறைவன்: திருவாலீஸ்வரர் இறைவி : திருபுரசுந்தரி

அறிமுகம்

நெரும்பூர் கல்பாக்கத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டுவிலிருந்து 28 கி.மீ தொலைவிலும், சென்னை இரயில் நிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் செங்கல்பட்டு. கோயில் பாழடைந்த நிலையில் இருந்தாலும், சிவன் வழிபாட்டில் உள்ளார். மூலவரை திருவாலீஸ்வரர் மற்றும் அம்பாள் திருபுரசுந்தரி என்றும் அழைக்கிறார்கள். கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட 3 அடுக்கு இராஜகோபுரம் தெற்குப் பக்கத்தில் உள்ளது. இராஜகோபுரம் சாய்ந்த நிலையில் உள்ளது மற்றும் சில ஆண்டுகளில் சரிந்து விழக்க்கூடும். சுற்றுசுவர் இல்லை. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியவற்றுடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை எளிய பிரதிபந்தா ஆதிஸ்தானத்தில் பத்மத்துடன் உள்ளது. கோஷ்டத்தில் துர்கை மட்டுமே உள்ளார். விநாயகர் மற்றும் பைரவர் மற்ற தெய்வங்கள். கருவறைக்கு மேல் விமானம் இல்லை. சோழக்கால கல்வெட்டுகள் குமுதாவில் உள்ளன. விஜயநகர காலத்தின் கல்வெட்டுகளும் ஆதிஸ்தானத்தில் காணப்படுகின்றன. இந்த கோயில் சோழக்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம், பின்னர் விஜயநகரர்களால் ஆதரிக்கப்பட்டுள்ளது. இப்போது கோயில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கருவறைக்கு மேல் தாவரங்களும் மரங்களும் வளர்ந்திருக்கின்றன. இது மேலும் கோயில் சிதிலமடைய காரணமாக உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெரும்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top