திருத்தணி ஸ்ரீ சுப்ரமணியசுவாமி (துலாம் ராசி) திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி
திருத்தணி ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 34, அரக்கோணம் சாலை, நேதாஜி நகர், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு 631211, தொலைபேசி: +91-44 2788 5303.
இறைவன்
இறைவன்: சுப்ரமணியசுவாமி இறைவி: வள்ளி, தெய்வானை
அறிமுகம்
திருத்தணி முருகன் கோவில், இந்தியாவில், தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, மலையில் அமைந்துள்ளது. வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிகளைக் கொண்டது இம்மலை. முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இதுவும் ஒன்று. அரக்கன் சூரபத்மனை அழித்த பிறகு சுப்ரமணியர் தங்கியிருந்த தலம் இது. சுப்ரமண்ய பகவான் தனது இரு துணைவிகளில் ஒருவரான வள்ளியை மணந்த தலம் திருத்தணி என்று கூறப்படுகிறது. இது ஒரு வியத்தகு காட்சியுடன் மலைகளின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த புனித தலம் அரக்கோணத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 84 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னை-மும்பை வழித்தடத்தில் உள்ளது. 1500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோவில். இக்கோயில் துலாம் ராசிக்கு பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் “உலகப்பற்று’ எனப்படும் ஆசையையும் குறிக்கும். “இது உனக்குச் சொந்தமானதல்ல, எனக்குச் சொந்தம்’ என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து கொள்ளாமல், கவண்கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து கொள்ளாத தன்மையைக் குறிக்கும் .இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும் இதுபோன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே விரும்புவான். அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப்பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம் பயமுறுத்தினார். அவர் அவளைத் தழுவினார். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள். பாமரர்கள், அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத்தலம் இது. முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் “தணிகை மலை’ என்று பெயர் பெற்ற இத்தலம் “திருத்தணி’ என்று மாறியது.
சிறப்பு அம்சங்கள்
ராசி எண் : 7 வகை : காற்று இறைவன் : வெள்ளி சமஸ்கிருத பெயர் : துலாம் ராசி சமநிலையின் குறியீடாக இருப்பதால், சமநிலை மற்றும் நீதி ஆகியவை அதன் முக்கிய குறிப்புகள். ஒவ்வொரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் எடைபோடுவது அதன் தன்மை கொண்டவர்கள். அவர்கள் சற்று பிரிக்கப்பட்ட மனோபாவமும் மென்மையான நடத்தைகளும் கொண்டவர்கள்.
திருவிழாக்கள்
மாசிப் பெருந்திருவிழா – வள்ளி கல்யாணம் – 10 நாட்கள் திருவிழா – இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பெறுவர். சித்திரைப் பெருந்திருவிழா – தெய்வானை உற்சவம் -10 நாட்கள் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். ஆடிக் கிருத்திகை -10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகா ஆந்திரா, மற்றும் ஆற்காடு பக்தர்கள் வரும்போது திருத்தணியே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கும். இத்தலத்தில் இது ரொம்பவும் விசேசமான திருவிழா ஆகும். இவை தவிர கிருத்திகை அன்றும் தமிழ் ,ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருத்தனி
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரக்கோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை