Friday Sep 20, 2024

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாஜலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு வெங்கடாஜலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில்,

கரிசூழ்ந்த மங்கலம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627453.

இறைவன்:

சக்கரத்தாழ்வார்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயில், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவராக சக்கரத்தாழ்வார் இருப்பதால் இது சக்கரத்தாழ்வார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. உற்சவர் வெங்கடாஜலபதி மட்டுமே. தாமரை பரணியின் தென்கரையில் பத்தமடை கோயிலுக்கு வடக்கே சுமார் 1 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

திருநெல்வேலி மற்றும் கரிசூழ்ந்த மங்கலம் இடையே  பேருந்து இயக்கப்படுகிறது. அருகிலுள்ள இரயில் நிலையம் சேரன்மகாதேவி மற்றும் வீரவநல்லூரில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் மதுரை, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

       (எம் மண்டலம் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரன்1 கி.பி 1298 ) குலசேகரன் குறிப்புக்களில் வெங்கடாஜலபதி திருக்கோயில் விமானம் கானீசரகுத்தர் மகன் பிதூசி ரகுத்தர் என்ற லாலா ஒருவரால் கட்டப்பட்டது பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.

கி.பி.1544ல் ஏர்ர திம்மராஜூவின் ஸ்தான்பதியாக இக்கிராமத்துக்கு வந்த அப்பயங்கார் என்பவர் தாமிரத்தால் மூடிய கொடிமரம் நிறுவி கெருட வாகனம் அளித்து பதினோரு ஆழ்வார்கள் சிலைகள் அமைத்து ஒரு வௌ்ளித் தாம்பாளமும் அளித்தார். கி.பி. 1545 ல் தினசரி பூஜை நடைபெறவும் பிற பணிகளுக்கும் நிலங்கள் கொடையாக அளித்தார். 16ம் நூற்றாண்டு காலத்தில் விஷ்ணு ஆலயங்களில் தாந்தரிக் ஆகமத்திலிருந்து வைகானஸ ஆகமத்திற்கு மாறியது. 1298ப் பின் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. வாய்மொழிச் செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

முற்காலத்தில் இக்கோயிலில் கேரள நம்பூதிரிகளின் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதும் கீழே குறிப்பிட்டுள்ள விவரங்கள் கேரள நம்பூதிரிகளின் வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டதற்கு சான்றாக அமைகிறது. கொடிமர அமைப்பு தெற்கு பிரகார மூலையில் காணப்படும் பலிபீடம் மூலஸ்தானத்திற்குள் செல்லும் பொழுது சட்டையை கழற்றி விட்டு செல்லுதல் ஆகியவை மூலம் நம்பூதிரிகள் ஆகம வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டது தெரிய வருகிறது.

சங்கடம் தீர்தீக்கும் சக்கரத்தாழ்வார் : தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இவர் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளார். இந்திரதுய்மன் என்பவன் யானையாக பிறந்த போது கூகு என்பவன் முதலையாக பிறந்தான். யானையின் காலை முதலை கவ்விய போது சக்கரத்தாழ்வார் அனுப்பிய திருமால் முதலையை வதைத்தார். இப்பெருமாளைப் பற்றி அம்பரிசன் கதை, கஜேந்திர மோட்சம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், சிசுபாலவதம், நரகாசுரவதம், மாலிகாவதம் போன்ற புராணக் கதைகள் மூலம் நாம் அறியலாம்.

வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை எல்லாம் தரும் சுதர்சன பெருமான் அழகிய நல்வழியை காட்டுபவர். எதிரிகளை விலகச் செய்பவர். புத்தி, சாமர்த்தியம்,வெற்றி இவைகளை அளிக்க தயங்காதவர். இவரை வழிபட்டால் குடும்ப ஒற்றுமையும், பக்திப்பெருக்கும் ததும்பும். பிறரின் அதிகாரத்திற்கு உட்படாமல் தன் சக்தியின் மூலம் ஏற்பட்ட பகவானின் சங்கல்பம் இத்தலத்தில் சுதர்சனமாக விளங்குவதால் இவரை வழிபடுபவர்களுக்கு எந்தத் தடையும் வராது. அவர் கையிலுள்ள ஆயுதங்கள் விழிப்புடன் இருந்து பக்தர்களைக் காப்பாற்றுகின்றன.

நம்பிக்கைகள்:

திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் இப் பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயாசம் வழங்கினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும்.

சிறப்பு அம்சங்கள்:

நன்மை தரும் நரசிம்மர்: பிரதோஷகாலங்களில் தொடர்ச்சியாக 11 பிரதோஷ தினங்களில் நரசிம்மருக்கு பானகம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

சுக்கிரன் பரிஹார ஸ்தலம்: சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. இக்கோயில் சுதர்சன பெருமான் சுக்கிரன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறார்.

கருடசேவை : நமது பெருமாள் கோவிலை குலதெய்வமாகக் கொண்டவர்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். அவ்வாறு அவர்கள் வரும் பொழுது சுவாமிக்கு கும்பம் வைத்து, அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரங்கள் சாத்தி, பொங்கல் வைத்து, அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். நேரமின்மை காரணமாக காலையில் வந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் தங்கள் வழிபாட்டினை முடித்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் பெருமாளின் பரிபூரண அருளினைப்பெற கெருடசேவை செய்வதே சாலச்சிறந்தது ஆகும். தங்கள் வீடுகளில் ஏதேனும் சுபகாரியங்கள் நடக்கின்ற காலங்களில் பெருமாளுக்கு கெருடசேவை வழிபாடு செய்தால் வெங்கிடாஜலபதியின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமாவர்.

திருவிழாக்கள்:

வைகுண்ட ஏகாதசி

காலம்

1500ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கரிசூழ்ந்தமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேரன்மகாதேவி மற்றும் வீரவநல்லூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top